3 மாநிலங்களில் "முதல்வர்" நாற்காலிக்கு 'தலை'களிடையே அடிதடி- பார்வையாளர்களை களமிறக்கிய பாஜக மேலிடம்!
டெல்லி: ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வெற்றி பெற்ற பாஜக முதல்வர் யார் என்பதை முடிவு செய்வதில் ரொம்பவே தடுமாறி வருகிறது. இதனையடுத்து 3 மாநிலங்களின் முதல்வர்களை தேர்வு செய்வதற்காக மேலிடப் பார்வையாளர்களை களமிறக்கியுள்ளது பாஜக.
ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 115 இடங்களில் வென்று காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பதவிக்கான போட்டியில் வசுந்தர ராஜே சிந்தியா, சாமியார் பாபா பாலக்நாத் உள்ளிட்டோர் உள்ளனர். தமக்கு 60க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக வசுந்தர ராஜே சிந்தியா, பாஜக மேலிடத்தை மிரட்டி வருகிறார். இதனையடுத்து வசுந்தர ராஜே சிந்தியா, பாலக்நாத் ஆகியோரை டெல்லிக்கு அழைத்தது பாஜக மேலிடம். இந்த ஆலோசனைகளுக்குப் பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வரை தேர்ந்தெடுக்கும் பார்வையாளர்களை பாஜக அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், வினோத் தவாடே, சரோஜ் பாண்டே ஆகியோர் ராஜஸ்தான் முதல்வரை தேர்ந்தெடுக்கும் மேலிடப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ம.பி: மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 163 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது. மத்திய பிரதேசத்தில் முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் தமக்குதான் முதல்வர் பதவி என்பதில் திட்டவட்டமாக உள்ளார். ஆனால் பாஜக மேலிடமோ புதுமுகம் ஒருவரை முதல்வராக்க விரும்புகிறது. டெல்லிக்கு அழைத்த போதும் சிவராஜ் சிங் சவுகான், மேலிடத் தலைவர்களை சந்திக்கவும் மறுத்துவிட்டார். இதனால் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், கே. லக்ஷமண், ஆஷா லக்ரா ஆகியோர் அடங்கிய பார்வையாளர்களை குழுவை மத்திய பிரதேச முதல்வரை தேர்வு செய்வதற்காக பாஜக நியமித்துள்ளது.
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 54 இடங்களில் வென்று காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னாள் முதல்வர் ரமண்சிங் அடம்பிடித்து நிற்கிறார். ஆனால் மத்திய அமைச்சராக இருந்த ரேணுகா சிங்குக்கு வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சத்தீஸ்கர் மாநில முதல்வரை தேர்ந்தெடுக்கும் பார்வையாளர்களாக மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, சர்பானந்தா சோனோவா மற்றும் துஷ்யந்த் கவுதம் ஆகியோரை பாஜக நியமித்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications