3 மாநிலங்களில் "முதல்வர்" நாற்காலிக்கு 'தலை'களிடையே அடிதடி- பார்வையாளர்களை களமிறக்கிய பாஜக மேலிடம்!
டெல்லி: ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வெற்றி பெற்ற பாஜக முதல்வர் யார் என்பதை முடிவு செய்வதில் ரொம்பவே தடுமாறி வருகிறது. இதனையடுத்து 3 மாநிலங்களின் முதல்வர்களை தேர்வு செய்வதற்காக மேலிடப் பார்வையாளர்களை களமிறக்கியுள்ளது பாஜக.
ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 115 இடங்களில் வென்று காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பதவிக்கான போட்டியில் வசுந்தர ராஜே சிந்தியா, சாமியார் பாபா பாலக்நாத் உள்ளிட்டோர் உள்ளனர். தமக்கு 60க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக வசுந்தர ராஜே சிந்தியா, பாஜக மேலிடத்தை மிரட்டி வருகிறார். இதனையடுத்து வசுந்தர ராஜே சிந்தியா, பாலக்நாத் ஆகியோரை டெல்லிக்கு அழைத்தது பாஜக மேலிடம். இந்த ஆலோசனைகளுக்குப் பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வரை தேர்ந்தெடுக்கும் பார்வையாளர்களை பாஜக அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், வினோத் தவாடே, சரோஜ் பாண்டே ஆகியோர் ராஜஸ்தான் முதல்வரை தேர்ந்தெடுக்கும் மேலிடப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ம.பி: மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 163 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது. மத்திய பிரதேசத்தில் முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் தமக்குதான் முதல்வர் பதவி என்பதில் திட்டவட்டமாக உள்ளார். ஆனால் பாஜக மேலிடமோ புதுமுகம் ஒருவரை முதல்வராக்க விரும்புகிறது. டெல்லிக்கு அழைத்த போதும் சிவராஜ் சிங் சவுகான், மேலிடத் தலைவர்களை சந்திக்கவும் மறுத்துவிட்டார். இதனால் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், கே. லக்ஷமண், ஆஷா லக்ரா ஆகியோர் அடங்கிய பார்வையாளர்களை குழுவை மத்திய பிரதேச முதல்வரை தேர்வு செய்வதற்காக பாஜக நியமித்துள்ளது.
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 54 இடங்களில் வென்று காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னாள் முதல்வர் ரமண்சிங் அடம்பிடித்து நிற்கிறார். ஆனால் மத்திய அமைச்சராக இருந்த ரேணுகா சிங்குக்கு வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சத்தீஸ்கர் மாநில முதல்வரை தேர்ந்தெடுக்கும் பார்வையாளர்களாக மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, சர்பானந்தா சோனோவா மற்றும் துஷ்யந்த் கவுதம் ஆகியோரை பாஜக நியமித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications