"இயேசு மட்டும் தான் கடவுள்.. சக்தி மாதிரில்லாம் இல்லை!" ராகுலிடம் சொன்ன ஜார்ஜ் பொன்னையா.. பாஜக கோபம்
டெல்லி: பாத யாத்திரை மேற்கொண்டிருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம், கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்த ஜார்ஜ் பொன்னையாவுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக செய்தி தொடர்பாளர் டுவிட் பதிவு வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடத்த தேர்தல்களில் தோல்வி மற்றும் பல முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்து விலகி சென்றது போன்ற காரணங்களால் காங்கிரஸ் கட்சி கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இதனால் ஆளும் பாஜகவுக்கு எதிராக பல்வேறு மாநில கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பாஜக, காங்கிரசுக்கு அடுத்தப்படியாக 3-வது அணி அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றன.

'பாரத் ஜோடோ யாத்ரா'
இந்த பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 7ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்கிய அவர், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 48 நாட்கள் 3,700 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார்.

பரவும் வீடியோ
இந்நிலையில் நடைபயணத்தின் போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஏசு கடவுளா? இல்லை கடவுளின் மகனா? என்பது குறித்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுடன் நடத்திய உரையாடல் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், ''ராகுல் காந்தி தனது நடை பயணத்தின் ஒரு பகுதியாக கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உள்ளிட்ட சிலருடன் பேசுகிறார். அதில், இயேசு கடவுளா என ராகுல் காந்தி கேட்டார்! அதற்கு சார்ஜ் பொன்னையா இயேசு கடவுள்தான் என கூறுகிறார்.

ஜார்ஜ் பொன்னையா பதில்
கடவுளின் உருவமா அல்லது கடவுளின் குழந்தையா என கேட்க... கடவுளின் உருவம் எனறோ, கடவுளின் குழந்தை என்றோ இயேசு கிறிஸ்துவை சொல்ல முடியாது அவர் அனைத்தும் சேர்ந்தவர். சாதாரணமானவர்களைப் போல மனிதன் மனிதன் இணைந்து இயேசு பிறக்கவில்லை. அவர் கடவுளின் உருவமும் கிடையாது. அவர்தான் கடவுள் என பாதிரியார் கூறினார். கூட அமர்ந்திருந்த இன்னொருவர், தண்ணீரை உதாரணமாக வைத்து இயேசு எப்படிப்பட்டவர் தெரியுமா என விளக்கம் கொடுத்தார். தற்போது இந்த வீடியோ காட்சி வேகமாக பரவி வருகிறது. அதேநேரம், ஜார்ஜ் பொன்னையா, இயேசுவை மட்டுமே விளக்காமல், கூடவே, அது சக்தி மாதிரியெல்லாம் கிடையாது. அவர்தான் முழு கடவுள் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சக்தி என்பது பராசக்தியின் வடிவம் என்பதும், தென் மாவட்டங்கள் பலவற்றில் சக்தி வழிபாடு உள்ளது, அதிலும் குறிப்பாக, சக்தி கோயில்கள் என்றே சில அம்மன் கோயில்கள் அழைக்கப்படுவது உண்டு. பிரம்ம சக்தி அம்மன் என்றும் வழிபடுகிறார்கள். எனவேதான், சக்தி மாதிரி இல்லை என்று ஜார்ஜ் பொன்னையா ஒப்புமை செய்தது மேலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண்டனம்
ஜார்ஜ் பொன்னையா ஏற்கனவே மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசி சிறை சென்று வந்தவர் என்றும், அவரை ஏன் ராகுல் காந்தி சந்தித்து பேச வேண்டும் என்றும் ஒரு சிலர் கேள்வி மற்றும் கண்டனம் தெரிவிவித்து வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில் ராகுல் காந்தி பாதியார்களை சந்தித்து பேசுவது அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக கூறி வருகின்றனர்.

ஏற்கனவே சிறை சென்றவர்
இவ்வாறு இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு பாஜனதா கடும் கண்டம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ''ராகுல் காந்தியை சந்தித்து பெசிய ஜார்ஜ் பொன்னையா, சக்தி (மற்றும் பிற கடவுள்கள்)போல் அல்லாமல் இயேசு மட்டுமே கடவுள் என்று கூறுகிறார். மேலும், பாரத மாதாவின் அசுத்தங்கள் நம்மை மாசுபடுத்தக்கூடாது என்பதற்காக அவர் காலணிகளை அணிவதாகவும் கூறுகிறார். ஜார்ஜ் பொன்னையா இதுபோன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்'' இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார் .
-
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்?












Click it and Unblock the Notifications