Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் பாஜக.. முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக தலைமையகத்தில் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதை தொடர்ந்து கடந்த ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட திரௌபதி முர்மு வெற்றிபெற்று உள்ளார்.

குடியரசுத் தலைவர் ஓய்வு

குடியரசுத் தலைவர் ஓய்வு

இதனை தொடர்ந்து நாளை நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்க உள்ளார். ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிவிட்டு ஓய்வு பெறுகிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஓய்வுபெறும் நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் நேற்று அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.

 பிரிவு உபசார விழா

பிரிவு உபசார விழா

இந்த பிரிவு உபசார விழாவில் பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்தையும் அளித்தார். இதில், ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், நாளை குடியரசுத் தலைவராக பதவியேற்க இருக்கும் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பல மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர்கள் கூட்டம்

முதலமைச்சர்கள் கூட்டம்

இதனை தொடர்ந்து நாளை நடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து இன்று பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தை பாஜக தலைமை கூட்டியது. இன்று கூடிய கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றனர்.

Recommended Video

    15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்பு - வீடியோ
    2024 நாடாளுமன்றத் தேர்தல்

    2024 நாடாளுமன்றத் தேர்தல்

    2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதுகுறித்து தங்கள் கட்சி முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியும் ஜே.பி.நட்டாவும் ஆலோசித்தனர். குறிப்பாக மத்திய அரசின் திட்டங்கள் மாநிலங்களில் செயல்படுத்தப்படுவது குறித்தும், மக்கள் நலத் திட்டங்கள் பற்றியும், மாநிலங்களில் அளித்த வாக்குறுதிகள் தொடர்பாகவும், மக்கள் மத்தியில் நிலவும் கட்சி மீதான செல்வாக்குகள் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+