குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு போராட்டத்தை கொடூரமாக ஒடுக்குவதற்கு சோனியா கண்டனம்
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போராடுவோரை கொடூரமான முறையில் போலீசார் ஒடுக்குவதற்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சோனியாகாந்தி இன்று வெளியிட்ட வீடியோ பதிவு:
அரசின் தவறான கொள்கைகளையும் முடிவுகளையும் எதிர்த்து போராடுகிற உரிமை ஜனநாயகத்தில் அனைவருக்கும் உண்டு. நமது அடிப்படை உரிமைகளையும் அரசியல் சாசன விழுமியங்களையும் பாதுகாப்பதில் காங்கிரஸ் துணை நிற்கும்.
In a democracy people have the right to raise their voice against wrong decisions & policies of the govt & register their concerns… BJP govt has shown utter disregard for people’s voices & chosen to use brute force to suppress dissent: CP Smt. Sonia Gandhi #IndiaAgainstCAA pic.twitter.com/5AKOpn76Dx
— Congress (@INCIndia) December 20, 2019
போராட்டத்தில் ஈடுபடுவோரை போலீசார் கொடூரமாக ஒடுக்குவது கடும் கண்டனத்துக்குரியது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது.
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications