Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேட்டையன் பாஜக! மோடி மட்டும்தான் கிங்! குறுநில மன்னர்கள் காலி! முகம் தெரியாதவர்கள் முதல்வரான பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 3 மாநிலங்களில் முகம் தெரியாதவர்களை முதலமைச்சர்களாக பாஜக தலைமை அறிவித்து இருப்பதன் பின்னணி என்ன என்று விரிவாக பார்ப்போம்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. டிசம்பர் 3 ஆம் தேதி ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகின. மிசோரம் மாநிலத்துக்கு டிசம்பர் 4 ஆம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக வென்றது. தெலுங்கானாவில் காங்கிரஸும், மிசோரத்தில் ZPM கட்சியும் வெற்றிபெற்றன.

Reason behind the BJP leadership announcing unpopular faces as CM in 3 states?

இந்த தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற 3 மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகியவற்றில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்றே கட்சித் தலைமை அறிவிக்காமல் போட்டியிட்டது. அதேபோன்று பாஜக எம்பிக்களை வைத்து பிரச்சாரம் மட்டும் செய்யாமல், மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு கொண்ட எம்பிக்களை போட்டியிட வைத்தது. தேர்தலில் போட்டிபோட்ட மத்திய அமைச்சர்கள் உட்பட பாஜக எம்பிக்கள் 12 பேரில் 10 பேர் வெற்றிபெற்றனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் படேல், ரித்தி பதக், ராக்கேஷ் சிங், உதய் பிரதாப் சிங் ஆகியோர் சபாநாயகரை சந்தித்தனர். அதேபோன்று ராஜஸ்தானில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர், கிரோடி லால் மீனா மற்றும் தியா குமாரி ஆகியோரும், சத்தீஸ்கரில் இருந்து அருண் சாவ் மற்றும் கோமதி சாய் உள்ளிட்டோர் வெற்றிபெற்றனர். இவர்கள் எம்பி பதவியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில், அவர்களே மாநில முதலமைச்சர்களாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று பேசப்பட்டது.

அதேபோன்று 3 மாநிலங்களில் முதலமைச்சர்களாக பதவி வகித்தவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்பட்டன. இந்த 3 மாநிலங்களுடன் தேர்தலை எதிர்கொண்ட தெலுங்கானா, மிசோரம் மாநிலங்களில் பதவியேற்பு விழாவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், பாஜக முதலமைச்சரே யார் என்று முடிவு செய்யாததால் 3 மாநிலங்களில் கட்சிக்குள் குழப்பங்களும் ஏற்பட்டன. இந்த நிலையில் அனைத்து கணிப்புகளையும் தகர்த்து முகம் தெரியாத 3 பேருக்கு 3 மாநிலங்களிலும் முதலமைச்சர் பதவியை வழங்கி உள்ளது பாஜக.

சத்தீஸ்கரில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த விஷ்ணு தியோ சாய், மத்திய பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மோகன் யாதவ், ராஜஸ்தானில் பிராமண சமுதாயத்தை சேர்ந்த பஜன்லால் ஷர்மா ஆகியோரை நியமித்து, சாதி பாகுபாடு பார்க்காத கட்சி என்ற தோற்றத்தை நிறுவ முயற்சித்து இருக்கிறது. இதை விட முக்கியமான விசயம், மாநிலங்களில் வலுவான தலைவர்களாக குறுநில மன்னர்கள்போல் இருந்த பாஜக தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர்களை காலி செய்துள்ளது பாஜக.

இதே வேலையை கர்நாடகாவில் பாஜக தலைமை செய்ய முயற்சித்து பெரும் அடியை தேர்தலில் சந்தித்தது. எனவே அவரை மகனையே மாநில தலைவராக அக்கட்சி அறிவித்து உள்ளது. ஆனால், வட இந்தியாவில் நிலவரம் வேறாக இருக்கும் என்பதை உணர்ந்த பாஜக தலைமை, இந்த 3 மாநில தேர்தல்களில் முன்னாள் முதலமைச்சர்களை தேர்தல் வரை நன்றாக பயன்படுத்திக்கொண்டு கழற்றிவிட்டு முகமறியாதவர்களை முதலமைச்சராக்கி உள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மோடி என்ற ஒற்றை மனிதன் தான் எல்லாம் என்பதை வட மாநில மக்கள் மனதில் ஆழப்பதிய வைக்கும் வகையில் இந்த நகர்வை அக்கட்சி எடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+