பிரதமர் மோடி தலைமையில் தேஜ கூட்டணி கூட்டம்- அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு- இபிஎஸ் ஷாக்!
டெல்லியில் பாஜக கூட்டணி கட்சிகள் கூட்டத்துக்கு ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கூட்டத்துக்கு அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் எம்பிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை கூடுகிறது. நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதனையடுத்து பிப்ரவரி 1-ந் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்றம் கூடும் நிலையில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. டெல்லியில் இன்று பிற்பகல் பிரதமர் மோடி தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி என்ற அடிப்படையில் அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் லோக்சபா குழு தலைவரான ஓ.பி.ரவீந்தரநாத் எம்.பி.க்கு இந்த அழைப்பை பாஜக அனுப்பி உள்ளது.
ஆனால் ஓபி ரவீந்தரநாத்தை அதிமுக லோக்சபா குழு தலைவராக ஏற்கக் கூடாது என ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அனைத்து கட்சிகள் கூட்டங்களுக்கு ஓபி ரவீந்தரநாத் அழைக்கப்பட்டு வருகிறார். தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்துக்கும் ஓபி ரவீந்தரநாத் அழைக்கப்பட்டுள்ளார். இது இபிஎஸ் தரப்பை கடும் அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், அவரது மகன் ஓபி ரவீந்தரநாத் உள்ளிட்டோர் நீக்கப்பட்டதாக இபிஎஸ் தரப்பு கூறுகிறது. ஆனால் ஓபிஎஸ்தான் இன்னமும் ஒருங்கிணைப்பாளர்; அவரது பதவி காலாவதியாகவில்லை என்கிறது அவரது தரப்பு. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கிறது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் அடுத்த 2 வாரங்களில் தீர்ப்பு வழங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரி இபிஎஸ் தரப்பு இடையீட்டு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையம், ஓபிஎஸ் தரப்பு பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதேநேரத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான உத்தரவுக்கும் பொதுக்குழு வழக்கின் தீர்ப்புக்கும் தொடர்பு இல்லை என்பதையும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இந்நிலையில்தான் டெல்லியில் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கூட்டத்துக்கு ஓபிஎஸ் மகன் அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications