Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போனில் அமித்ஷாவுக்கு வந்த தகவல்.. உற்சாகத்தில் என்டிஏ..பாஜகவிற்கு மேலும் சில எம்பிக்கள் சப்போர்ட்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைய சுயேச்சை மற்றும் சிறு கட்சிகளை சேர்ந்த 10 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்ததாக வெளியான தகவலில் உண்மையில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

நம் நாட்டின் 18வது லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

Amit Shah Lok Sabha Election 2024 Lok Sabha Election Results 2024 Congress BJP PM Modi 2024 2024

400 தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த பாஜகவுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. எக்ஸிட் போல் முடிவுகள் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறிய நிலையில், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாகவே இருந்தது. 400+ இடங்கள் என்று சொல்லித் தேர்தலை எதிர்கொண்ட பாஜகவுக்கும் மிகப் பெரிய ஷாக் காத்திருந்தது.

ஏனென்றால் பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. 543 சீட்களை கொண்ட நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க எந்தவொரு கட்சியும் 272 இடங்களில் வெல்ல வேண்டும். ஆனால், பாஜக 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் 16 சீட்களிலும், ஜேடியு 12 சீட்களிலும், ஷிண்டே சிவசேனா 6 சீட்களிலும் வென்றன.

இதனால் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலே ஏற்பட்டது. இப்போது பாஜக ஆட்சியை அமைக்க சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாரின் ஆதரவு நிச்சயம் தேவை என்ற ஒரு சூழலே உருவாகி இருக்கிறது. இதற்கிடையே பாஜக ஏற்கனவே ஆட்சியை அமைக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்படி இன்று பிரதமர் மோடி இல்லத்தில் கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜேடியு தலைவர் நிதிஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். சந்திரபாபு நாயுடு, ஜேடியு தலைவர் நிதிஷ்குமார் ஆகியோர் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கடிதம் மூலம் எழுதிகொடுத்துள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 எம்பிக்கள் ஆதரவு உள்ளது.

இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைவராக பிரதமர் மொடி ஒருமனதாக இந்த கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க தேசிய ஜனநாயக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். 15 கட்சிகளின் ஆதரவை அடுத்து பிரதமர் மோடியை தலைவராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலே ஏற்பட்டது. இப்போது பாஜக ஆட்சியை அமைக்க சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாரின் ஆதரவு நிச்சயம் தேவை என்ற ஒரு சூழலே உருவாகி இருக்கிறது. இதற்கிடையே பாஜக ஏற்கனவே ஆட்சியை அமைக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்படி இன்று பிரதமர் மோடி இல்லத்தில் கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜேடியு தலைவர் நிதிஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். சந்திரபாபு நாயுடு, ஜேடியு தலைவர் நிதிஷ்குமார் ஆகியோர் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கடிதம் மூலம் எழுதிகொடுத்துள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 எம்பிக்கள் ஆதரவு உள்ளது.

இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைவராக பிரதமர் மொடி ஒருமனதாக இந்த கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க தேசிய ஜனநாயக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். 15 கட்சிகளின் ஆதரவை அடுத்து பிரதமர் மோடியை தலைவராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+