Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்னிபாத் திட்டம்.. எம்எல்ஏ, எம்பி-க்களுக்கு எதற்கு ஓய்வூதியம்.. பாஜக எம்.பி. வருண் காந்தி கேள்வி..!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம் பெற தகுதியில்லை என்றால், மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டும் எதற்கு ஓய்வூதியம் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 'அக்னிபாத்' என்ற திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜூன் 14ல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு வெளியிட்டார். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்களுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருக்க வாய்ப்பளிக்கப்படும். 4 ஆண்டு பணியை முடித்து வெளியில் செல்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது

இளைஞர்கள் போராட்டம்

இளைஞர்கள் போராட்டம்

இதனால் அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தத் திட்டம் நீண்டநாள் ராணுவ சேவையாற்ற விரும்பும் இந்திய இளைஞர்களின் விருப்பத்துக்கு மாறாக உள்ளது. மேலும் ஒப்பந்த பணியாக ராணுவ சேவை மாற்றப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து பீகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதேபோல் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன.

அக்னிபாத் கைவிடப்படாது

அக்னிபாத் கைவிடப்படாது

தொடர்ந்து ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி, ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அக்னிவீரர்களுக்கும் வழங்கப்படும். ஒருபோதும் அக்னிபாத் திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது. இந்திய ராணுவத்தை இளமையாக்கும் நோக்கில் நீண்ட காலம் திட்டமிடப்பட்டு கொண்டு வரப்பட்டது அக்னிபாத் திட்டம் என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்

எதிர்க்கட்சிகள் கண்டனம்

இதனிடையே அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. முக்கியமாக காங்கிரஸ் கட்சி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், பாஜகவின் அக்னிபாத் திட்டத்தை ஆக்ரோஷமாக விமர்சித்தனர். இது இந்திய ராணுவத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கை என்று குற்றம்சாட்டப்பட்டது.

வருண் காந்தி ட்வீட்

வருண் காந்தி ட்வீட்

இந்த நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண்காந்தியின் ட்வீட் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அக்னிபாத் திட்டம் குறித்து அவர், 4 ஆண்டுகாலம் இந்திய ராணுவப் பணியில் இருக்கும் அக்னி வீரர்கள் ஓய்வூதியம் பெற உரிமை இல்லை என்றால், மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டும் எதற்கு ஓய்வூதியம். இந்த நாட்டைக் காப்பவர்கள் ஓய்வூதியம் பெறத் தகுதியற்றவர்கள் என்றால், நானும் எனது ஓய்வூதியத்தை விட்டுக் கொடுக்க தயார் என்று தெரிவித்துள்ளார். மேலும், எம்எல்ஏ-க்கள், எம்.பி-க்கள் தங்களது ஓய்வூதியத்தை விட்டுக் கொடுத்தால், அக்னி வீரர்கள் அதனைப் பெறுவதை உறுதிப்படுத்த முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+