காஷ்மீர் என்கவுண்ட்டரில் பலியானது இந்து தலைவர்கள் படுகொலை வழக்கில் தேடப்பட்ட பயங்கரவாதி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடான மோதலில் சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தலைவர்கள் படுகொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி ஒசாமா என தெரியவந்தது.

ஜம்மு காஷ்மீரின் ராம்பான் மாவட்டம் படோட் பகுதியில் வீடு ஒன்றுக்குள் 3 பயங்கரவாதிகள் புகுந்து தப்பிக்க முயற்சித்தனர். அந்த வீட்டின் உரிமையாளர் பாஜக தொண்டர்.

BJP, RSS leaders murders case accused killed in JK

அவரை பயங்கரவாதிகள் பிணைக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டை பல மணிநேரம் நீடித்தது.

இறுதியில் பயங்கரவாதிகளான ஒசாமா, ஹரூன் மற்றும் ஜாஹீத் ஆகியோர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதில் ராணுவ வீரர் ராஜேந்திரர் சிங் வீரமரணம் அடைந்தார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ஒசாமாதான் பாஜக, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் படுகொலை வழக்கில் தேடப்பட்ட நபராவார். 2018-ம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் அனில் பாரிஹர், அவரது சகோதரர் அஜித் பாரிஹர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகி சந்திரகேந்த் சர்மா மற்றும் அவரது பாதுகாவலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த 4 படுகொலை வழக்குகளிலும் ஒசாமாதான் குற்றவாளி என்பதால் போலீசார் தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+