டெல்லி: நேற்று இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் அளிக்க வேண்டும் என்று ப. சிதம்பரம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சிபிஐ தரப்பில் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பர சிக்கி உள்ளார். இவர் நேற்று சிபிஐ மூலம் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இன்று மதியம் இரண்டு மணிக்கு டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.
Aug 22, 2019, 6:56 pm IST
சிபிஐ காவலில் உள்ள சிதம்பரத்தை தினமும் 30 நிமிடங்கள் சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி
Aug 22, 2019, 6:40 pm IST
ப.சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு.
ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க முடியாது: சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
Aug 22, 2019, 5:34 pm IST
ப. சிதம்பரம் வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் உத்தரவு.
ப. சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை.
Aug 22, 2019, 5:05 pm IST
ப. சிதம்பரம் வழக்கில் 1.30 மணி நேர வாதம் நிறைவடைந்தது.
30 நிமிடம் கழித்து உத்தரவு வழங்கப்படும் - நீதிபதி அஜய் குமார்.
Aug 22, 2019, 5:03 pm IST
ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? : அரை மணி நேரத்தில் உத்தரவு
Aug 22, 2019, 5:02 pm IST
சிபிஐ நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் பேசுகிறார்
Aug 22, 2019, 4:57 pm IST
ப. சிதம்பரம் சாதாரண மனிதர் இல்லை என்று சிபிஐ வாதம் செய்தது.
Aug 22, 2019, 4:51 pm IST
சிதம்பரத்தை பேச அனுமதிக்க கூடாது - சிபிஐ தரப்பு எதிர்ப்பு
Aug 22, 2019, 4:51 pm IST
முன்னாள் அமைச்சர் என்பதற்காக சலுகை தர கூடாது - சிபிஐ
Aug 22, 2019, 4:50 pm IST
சிதம்பரத்திடம் கேள்வி கேட்க விரும்பினால் நீதிமன்றம் கேட்கலாம் - அபிஷேக் மனு சிங்வி
Aug 22, 2019, 4:44 pm IST
ப. சிதம்பரத்தை கண்டிப்பாக காவலில் எடுக்க வேண்டும் - சிபிஐ.
ப. சிதம்பரம் தரப்பு வாதிட்ட போது சிபிஐ தரப்பு குறுக்கீடு.
Aug 22, 2019, 4:28 pm IST
ப. சிதம்பரத்திற்கு எப்போது சம்மன் அனுப்பினீர்கள் - சிபிஐக்கு நீதிபதி அஜய் குமார் கேள்வி
Aug 22, 2019, 4:25 pm IST
ப. சிதம்பரத்தின் இடைக்கால முன் ஜமீனை 7 மாதம் கழித்து ரத்து செய்தது ஏன்? - அபிஷேக் மனு சிங்வி
Aug 22, 2019, 4:25 pm IST
இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் கொடுத்து 4 மாதம் கழித்தே விசாரணை தொடங்கியது.
அதன்பின்பே ப. சிதம்பரம் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் - அபிஷேக் மனு சிங்வி.
Aug 22, 2019, 4:25 pm IST
ப. சிதம்பரம் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதங்களை தொடங்கினார்
Aug 22, 2019, 4:21 pm IST
ப. சிதம்பரம் 24 மணி நேரமாக தூங்கவில்லை - கபில் சிபல்
Aug 22, 2019, 4:15 pm IST
நேற்று சிபிஐ சிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை -கபில்சிபல்
Aug 22, 2019, 4:12 pm IST
அனைத்து கேள்விக்கும் ப. சிதம்பரம் இதுவரை பதில் சொல்லியுள்ளார்.
ஆதாரமே இல்லாமல் அவரை சிபிஐ தரப்பு கைது செய்துள்ளது - கபில் சிபல்.
Aug 22, 2019, 4:10 pm IST
ப.சியிடம் 12 கேள்விகள் மட்டுமே கேட்டுள்ளார்கள்.
அதுவும் 12 மணி வரை யோசித்து இந்த கேள்விகளை கேட்டுள்ளனர்.
ப.சியிடம் கேட்க அவர்களிடம் கேள்விகளே இல்லை- கபில் சிபல்.
Aug 22, 2019, 4:09 pm IST
ப.சியிடம் கேட்ட கேள்வியை வேண்டும் என்று மீண்டும் கேட்டனர்.
அவர் ஏற்கனவே இதற்கு பதில் அளித்துவிட்டார்.
வேண்டும் என்றே இப்படி அவரை தொந்தரவு செய்துள்ளனர் - கபில் சிபல்
Aug 22, 2019, 4:07 pm IST
ஒரே ஒரு நாள் மட்டுமே சிதம்பரத்திடம் விசாரணை செய்தார்கள்- கபில் சிபல்
Aug 22, 2019, 4:06 pm IST
விசாரிக்கும் தேவை இருந்தால் எப்போது வேண்டுமானாலும் அவரை அழைத்திருக்கலாம் - கபில் சிபல்
Aug 22, 2019, 4:06 pm IST
சிபிஐ அழைப்பை சிதம்பரம் எப்போதும் நிராகரித்ததில்லை - கபில் சிபல்
Aug 22, 2019, 4:06 pm IST
இந்த வழக்கில் ப.சிதம்பரம் மட்டுமே குறி வைக்கப்படுகிறார்.
அந்நிய முதலீட்டு மேம்பட்டு வாரியத்தில் உள்ளவர்கள்தான் இதற்கு அனுமதி அளித்தனர்.
ஆனால் அதில் யாருமே விசாரணை செய்யப்படவில்லை - கபில் சிபல்.
Aug 22, 2019, 4:02 pm IST
ப. சிதம்பரத்திற்கு இந்த வழக்கில் நேரடியாக தொடர்பு எதுவும் இல்லை - கபில் சிபல்
Aug 22, 2019, 4:02 pm IST
ப. சிதம்பரம் நிதி அமைச்சராக கையெழுத்து மட்டுமே போட்டார் - கபில் சிபல்
Aug 22, 2019, 4:02 pm IST
10 வருடம் கழித்துதான் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது- கபில் சிபல் வாதம்
Aug 22, 2019, 4:02 pm IST
ப.சிதம்பரம் தவிர வழக்கு தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு இல்லை- கபில் சிபல் வாதம்
Aug 22, 2019, 4:00 pm IST
ஐஎன்எக்ஸ் முறைகேட்டில் ஏற்கனவே விசாரணை முடிந்துவிட்டது - கபில் சிபல்
Aug 22, 2019, 4:00 pm IST
அதனால் இந்த வழக்கில் கஸ்டடி விசாரணை தேவையில்லை - கபில் சிபல்
READ MORE
8:25 AM, 21 Aug
அவகாசம் தேவை
சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறும் வரை ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவதை தள்ளி வைக்குமாறு ப.சிதம்பரத்தின் வக்கீல் கோரிக்கை
8:25 AM, 21 Aug
2 மணி நேரம்
விசாரணைக்காக 2 மணி நேரத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று ப.சிதம்பரத்திற்கு சிபிஐ உத்தரவிட்டிருப்பதால் பரபரப்பு அதிகரிப்பு
8:51 AM, 21 Aug
தப்பி ஓடி விட்டார் - சாமி
ப.சிதம்பரம் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டதாக சுப்பிரமணியம் சாமி டிவீட் போட்டுள்ளார்.
10:04 AM, 21 Aug
4-வது முறையாக ப.சிதம்பரத்தை தேடி வந்த சிபிஐ அதிகாரிகள்.
ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
10:12 AM, 21 Aug
சிபிஐ நடவடிக்கை மிக மோசம்: காங். சீனியர் தலைவர் சல்மான் குர்ஷித் கருத்து.
போலீஸ் ராஜ்யம் நடப்பதாக ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கண்டனம்.
10:48 AM, 21 Aug
ப.சிதம்பரம் வழக்கில் உடனடி உத்தரவு பிறப்பிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா.
வழக்கை தலைமை நீதிபதி கோகோய்க்கு அனுப்பினார் நீதிபதி ரமணா.
10:48 AM, 21 Aug
தலைமை நீதிபதி தீர்ப்பு அளிக்கும் வரை சிதம்பரத்தை கைது செய்ய தடை இல்லை
10:55 AM, 21 Aug
தலைமை நீதிபதி காேகோய் கோர்ட்டில் ப.சிதம்பரம் வழக்கறிஞர்கள் ஆஜர்
10:56 AM, 21 Aug
ப. சிதம்பரம் வழக்கை அவசரமாக விசாரிப்பதா என்பது பற்றி மதியம் முடிவு.
உணவு இடைவேளைக்கு பிறகு தலைமை நீதிபதி முடிவெடுப்பார்.
11:02 AM, 21 Aug
ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ்.
சிதம்பரம் வெளிநாட்டுக்குச் செல்ல முடியாதபடி லுக்அவுட் நோட்டீஸ்.
11:05 AM, 21 Aug
அரசின் தலையீடு இருப்பதால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விசாரிக்க தயக்கம்- கே.எஸ். அழகிரி
11:18 AM, 21 Aug
தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அயோத்தி வழக்கை விசாரித்து வருகிறது.
மதியத்திற்கு பிறகுதான் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விசாரணை நடத்த வாய்ப்பு.
11:21 AM, 21 Aug
தலைமை நீதிபதி முடிவெடுக்கும் வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை
11:42 AM, 21 Aug
ப.சிதம்பரம் கார் டிரைவரிடம் அமலாக்கத்துறை விசாரணை.
சிதம்பரம் எங்கே உள்ளார் என்ற தகவல் கார் டிரைவருக்கும் தெரியவில்லை .
11:43 AM, 21 Aug
ப.சிதம்பரத்தின் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது போன் கடைசியாக டெல்லி லோதி சாலையை காட்டுவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11:47 AM, 21 Aug
ப. சிதம்பரம் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
கடைசியாக டெல்லி லோதி சாலையில் சிதம்பரம் போன் 'ஆனில்' இருந்துள்ளது.
12:16 PM, 21 Aug
ப.சிதம்பரம் வழக்கில் மதியம் 2 மணிக்கு முடிவெடுக்கிறார் தலைமை நீதிபதி.
அவசர வழக்காக விசாரிப்பதா இல்லையா என்பது பற்றி முடிவு.
12:17 PM, 21 Aug
ப.சிதம்பரம் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனு தாக்கல்.
சிதம்பரம் விவகாரத்தில் எந்த முடிவெடுத்தாலும் சிபிஐயிடம் கருத்து கேட்க வலியுறுத்தல்.
12:38 PM, 21 Aug
ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை
12:55 PM, 21 Aug
ப. சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்
Modi's Govt is using the ED, CBI & sections of a spineless media to character assassinate Mr Chidambaram.
I strongly condemn this disgraceful misuse of power.
ப.சிதம்பரத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறது மத்திய அரசு- ராகுல் காந்தி
1:15 PM, 21 Aug
ப. சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க சிபிஐ, அமலாக்கப் பிரிவை பயன்படுத்துகிறது பாஜக- ராகுல் காந்தி
1:45 PM, 21 Aug
ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்- மு.க.ஸ்டாலின்.
வழக்கை சிதம்பரம் சட்ட ரீதியாக சந்திப்பார் என்று ஸ்டாலின் நம்பிக்கை.
2:10 PM, 21 Aug
ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவில் குறைகள் இருப்பதாக நீதிபதி கருத்து.
குறைகளை சரி செய்து புதிய மனு தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தல்.
2:13 PM, 21 Aug
ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனுவை நீதிபதி ரமணா மீண்டும் விசாரிக்கிறார்
2:19 PM, 21 Aug
ப.சிதம்பரத்திற்கு இடைக்கால சட்ட பாதுகாப்பு கேட்கும் கபில் சிபல்.
உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா முன்னிலையில் வாதம்.
2:24 PM, 21 Aug
ப சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரிக்க நீதிபதி என்.வி. ரமணா மீண்டும் மறுத்து விட்டார். மனுவில் இருந்த குறைபாடுகளை சரி செய்து தாக்கல் செய்தும் நீதிபதி ரமணா விசாரிக்க மறுத்து விட்டார்.
2:25 PM, 21 Aug
ப.சிதம்பரம் வழக்கை எந்த நீதிபதி விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார்: நீதிபதி ரமணா
2:45 PM, 21 Aug
ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை இல்லை என தகவல்
3:29 PM, 21 Aug
ப. சிதம்பரம் மனு மீது இன்று விசாரணை நடைபெறுமா? மாலை 4 மணிக்கு தெரியும்.
அயோத்தி வழக்கை விசாரித்த பிறகு தலைமை நீதிபதி முடிவை அறிவிப்பார்.