சானிட்டரி நாப்கின்.. மரபுகளை உடைத்த மோடி.. ஒரு பிரதமர் இப்படி பேசுவது இதுவே முதல்முறை.. கிரேட்!
டெல்லி: பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் நேற்று சானிட்டரி நாப்கின் குறித்து பேசியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
நாட்டின் 74வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. மிகவும் சிறப்பாக நாடு முழுக்க விழா கொண்டாடப்பட்டது. இதற்காக நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.கொரோனா பரவலுக்கு இடையே கடும் கட்டுப்பாடுகளுடன் நேற்று கூட்டம் நடைபெற்றது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேசிய கொடியேற்றி வைத்தார்.கொரோனா பாதிப்பு, எல்லை பிரச்சனை என்று பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி இன்று தனது உரையில் குறிப்பிட்டார்..

என்ன பேசினார்
இந்த சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, நேற்று சானிட்டரி நாப்கின் குறித்து பேசினார். நாடு முழுவதும் ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படுகிறது. இந்த அரசு எப்போதும் நம் நாட்டு மகள்கள், சகோதரிகளின் ஆரோக்கியம் குறித்த அக்கறை கொண்டு இருக்கிறது. பெண்களின் ஆரோக்கியம் இந்த நாட்டிற்கு மிக முக்கியம். பெண்களின் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு அவசியம்.

மாதவிடாய் எப்படி
இதற்காக நாடு முழுக்க நாங்கள் 6000 சென்டர்களை அமைத்து உள்ளோம். இங்கு எளிதாக பெண்கள் சானிட்டரி நாப்கின்களை பெற முடியும். மொத்தம் 50 மில்லியன் சானிட்டரி நாப்கின்களை பெண்கள் கடந்த வருடம் இதன் மூலம் பெற்று இருக்கிறார்கள். பெண்களை முன்னேற்றுவதில் நாங்கள் குறிக்கோளுடன் செயல்படுகிறோம். இதற்காக இந்த அரசு திட்டங்களை கொண்டு வருகிறது.

குறிக்கோள்
கடற்படை, விமானப்படை அனைத்திலும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கான உயர் பதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் இப்போது தலைவர்களாக இருக்கிறார்கள். அவர்கள்தான் இந்தியாவின் தூண்கள். அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டு இருந்தார்.

செம
பிரதமர் மோடி தனது பேச்சில் சானிட்டரி நாப்கின் குறித்து பேசியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சுதந்திர தின உரையில் ஒரு பிரதமர் சானிட்டரி நாப்கின் குறித்தும் மாதவிடாய் குறித்தும் பேசுவது இதுவே முதல்முறையாகும். பெண் ராணுவ மேஜர் ஸ்வேதா பாண்டேவிற்கு நேற்றுதான் பிரதமர் மோடி செங்கோட்டையில் மரியாதை செலுத்தினார்.

சூப்பர் பேச்சு
அதே நாளில் அவரை வைத்துகொன்டே பெண்களின் ஆரோக்கியம் குறித்து பிரதமர் மோடி பேசி இருக்கிறார் . இதுதான் இவரின் பேச்சு வரவேற்பை பெற முக்கிய காரணம் ஆகும். அதேபோல் பொதுவாக தலைவர்கள் பெரிய மேடைகளில் மாதவிடாய் குறித்து பேசுவது இல்லை. பெண் தலைவர்கள் கூட இதை விழா மேடைகளில் குறிப்பிட்டு பேசியது இல்லை.

விலக்கு இல்லை
எப்போதும் இது ஒரு விலக்கப்பட்ட டாப்பிக் என்றுதான் இருந்துள்ளது. அதிலும் ஆண்கள் சானிட்டரி நாப்கின் குறித்து பொதுவில் பேசவே கூச்சம் அடைவார்கள் . அப்படி இருக்க பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் சானிட்டரி நாப்கின் குறித்து பேசியுள்ளார். இது இயற்கையான விஷயம் என்பதை உணர்த்தும் வகையில் மோடி இயல்பாக பேசினார். இந்தியாவில் பல நெடுங்காலமாக விளங்கும் மரபு இதன்மூலம் தகர்த்து எறியப்படும் என்று நம்புவோம்!
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications