காவிக்கு மாறிய பிஎஸ்என்எல்.. கனெக்டிங் இந்தியா டூ கனெக்டிங் பாரத்.. 7 புதிய வசதிகள் என்னென்ன?
டெல்லி: மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி லோகோ காவி நிறத்திற்கு மாறி உள்ளது. அதேபோல் Connecting India என்னும் வாசகம் Connecting Bharat என்றும் மாற்றப்பட்டுள்ளது. அதோடு ஏழு புதிய சேவைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நிகராக சேவையை வலுப்படுத்தி வருகிறது.
இந்தியாவின் நான்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களில் மூன்று தனியாருடையது. அதாவது ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் ஆகும். இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 4ஜி சேவையை நாடு முழுவதும் பரவலாக்கிய பின்னர், தனது சேவையை வேகப்படுத்தி மலிவான கட்டணத்துடன் பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஏழு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க், பிஎஸ்என்எல் ஐபிடிவி, டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி, பைபர் டு தி ஹோம் பயனர்களுக்கு தேசிய Wi-Fi ரோமிங் சேவை, என்கிரிப்டட் கம்யூனிகேஷன் ஃபார் டிஸாஸ்டர்ஸ், நிலக்கரி சுரங்கத்துக்கு பிரத்யேக 5ஜி நெட்வொர்க் போன்ற சேவையை அளிக்க முடிவு செய்துள்ளது. இதில் ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க் என்பது பயனர்கள் மோசடியாளர்களிடம் இருந்து தப்பிக்க வழிவகுக்கும். வைஃபை ரோமிங் வசதி என்பது எஃப்டிடிஎச் (fiber-to-the-home) வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணைய வசதியை வழங்கும். எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல், இந்த வசதி வழங்கப்படும். அதேபோல, பிஎஸ்என்எல் ஐபிடிவி (fiber-based intranet) தொலைக்காட்சி சேவையும் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் 500 லைவ் சேனல்களை காண முடியும். எனினும் இது பிராட்பேண்ட் டேட்டாவை எடுத்துக்கொள்ளாது.
டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி என்ற வசதி எப்படி என்றால், தொலைத்தொடர்பு வசதி இல்லாத இடங்களிலும், அதாவது நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் குறுஞ்செய்தி அனுப்பவும் யுபிஐ பேமெண்ட் செய்யவும் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும்.

இந்த ஏழு சேவைகளுடன் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது லோகோவை காவி நிறத்திற்கு மாற்றி உள்ளது. Connecting India என்னும் வாசகம் Connecting Bharat என்றும் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் எதிர்காலத்தில் கட்டணங்களை உயர்த்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. கடந்த ஜூலையில் அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் கட்டணங்களை உயர்த்தியிருந்தன. ஆனால் பிஎஸ்என்எல் மட்டும் எந்த கட்டண உயர்வையும் அறிவிக்கவில்லை. பிஎஸ்என்எல் நிறுவனம் தனது கவனம் முழுவதையும் நுகர்வோரை திருப்திப்படுத்துவது மற்றும் அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதில் செலுத்தியுள்ளதாக பிஎஸ்என்எல் தலைவர் ராபர்ட் ரவி கூறியிருக்கிறார்.
இதுபற்றி பிஎஸ்என்எல் தலைவர் ராபர்ட் ரவி கூறும் போது, எதிர்காலத்தில் நாங்கள் எங்கள் கட்டணங்களை அதிகரிக்கப் போவதில்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். இன்று,பிஎஸ்என்எல்-இன் முதன்மையான ஆர்வம் எங்கள் நுகர்வோரை மகிழ்ச்சி வைப்பதும், அவர்களின் நம்பிக்கையைப் பெறுவது தான் என்றார்.
பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே சோதனை முறையில் 4ஜி சேவைகளை வழங்கத் தொடங்கி உள்ளது. இந்த காலண்டர் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு முழு அளவில் செயல்படுத்தும் என தெரிகிறது. பிஎஸ்என்எல் சுமார் 1.8 கோடி 4ஜி வாடிக்கையாளர்களை வைத்திருக்கிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications