Budget 2019: சம்பளதாரர்களே உங்களுக்கு ஒரு நற்செய்தி.. மத்திய பட்ஜெட்டில் காத்திருக்கும் சலுகைகள்
Recommended Video

டெல்லி: பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள இடைக்கால பட்ஜெட்டில், தனிநபர்களுக்கு மிகுந்த சலுகைகள் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாண்டில் கோடைகாலத்தில் லோக்சபாவிற்கு பல கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.
எனவே தற்போதைய மோடி அரசின் தேர்தலுக்கு முந்தைய இறுதி பட்ஜெட்டாக இந்த இடைக்கால பட்ஜெட் அமைய உள்ளது. இதில் பல கவர்ச்சிகர சலுகைகள் அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் பார்வையாளர்களும், பொருளாதார வல்லுனர்களும் கணிக்கிறார்கள்.

வருமான வரி உச்சவரம்பு
இதில் மிக முக்கியமானதும், மிக நீண்ட நாள் கோரிக்கையுமானதும், தனிநபர்களுக்கு மிகுந்த பலன் அளிக்கக் கூடியதுமான வருமான வரி உச்சவரம்பு உயர்வு என்ற அஸ்திரமும் ஒன்றாகும். தனிநபர் வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மேலாக இருந்தால் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற உச்சவரம்பு 2014ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்று சலுகை வழங்கப்பட்டது. ஆனால் விலைவாசி உள்ளிட்ட, நடப்பு நிலவரத்தை ஒப்பிட்டால் இந்த அளவு என்பது மிகமிகக் குறைவாகும்.

ஏமாற்று வேலை
எனவே தனிநபர் ஆண்டு வருமான வரி உச்சவரம்பு என்பது அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் இதே போன்று எதிர்பார்ப்பு இருந்தபோதிலும் மத்திய அரசு வேறுவிதமான ஒரு சிறிய சலுகை அளித்தது. அதாவது 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான வருவாய் கொண்டவருக்கு 10 சதவீத வருமான வரி விதிக்கப்பட்ட நிலையில், அது 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால் இந்த சிறு சலுகையால், தனிநபர்களுக்கு பெரிய பலன் எதுவும் கிடைக்கவில்லை.

ரூ.3 லட்சம் வரை
மத்தியதர சம்பளக்காரர்களின் இந்த மனக் குமுறலை கருத்தில் கொண்டு வருமான வரி உச்சவரம்பு ஆண்டுக்கு 3 லட்சம் என்ற அளவில் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் தனிநபர்களுக்கு, வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் பெருவாரியான சம்பளதாரர்களின் மிக முக்கிய கோரிக்கை ஆகும்.

80 சி
இதேபோல 80சி பிரிவின் கீழ் வழங்கப்படும் வரிவிலக்கு என்பது, ரூ.1.5 லட்சத்திலிருந்து இரண்டரை லட்சமாக உயர்த்தப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக மக்கள் பல்வேறு நிதி முதலீடுகளை நாடிச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

வீட்டுக்கடன்
வீட்டுக்கடன் மீதான வட்டி கழிவு தற்போது 2 லட்சமாக உள்ளது. இது 3 லட்சமாக உயர்த்தப்பட்ட வாய்ப்புள்ளது. வீட்டு கடன் பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications