பட்ஜெட் 2020: வெளிநாட்டு மின்சார வாகனங்கள் விலை உயருகிறது.. சுங்க வரி அதிரடியாக உயர்வு
Recommended Video
டெல்லி: இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மின்சார வாகனங்கள் மீதான சுங்க வரி உயர்தப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்கள் விற்காமல் தேங்கி வரும் நிலையில் அதை உற்பத்தியை ஊக்குவிக்க அரசு பல்வேற அதிரடியாக நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இப்போது இன்னொரு புதிய அதிரடி நடவடிக்கையாக இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான சுங்க வரியை அதிகரிப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட மின்சார வாகனங்களின் விலையும் அதிரடியாக உயரப்போகிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய பட்ஜெட்டில் இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள் மற்றும் குறிப்பிட்ட மொபைல் போன்களுக்கான சுங்க வரியை உயர்த்தி அறிவித்துள்ளார்.
உள்ளூரில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களையே மக்கள் அதிகம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி முழுமையாக வடிவமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான (CBUs) சுங்க வரியை 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதேபோல் பகுதி வடிவமைக்கப்பட்ட (semi knocked-down) பயணிகள் மின்சார வாகனங்களுக்கான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications