பட்ஜெட் 2021 : புது புது திட்டங்கள்...ரயில்வே துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வாய்ப்பு
புதுடெல்லி : நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
பாதுகாப்பு தொடர்பான பணிகள், மெகா உள்கட்டமைப்பு உள்ளிட்ட செலவீனங்களுக்காக 1.81 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை, ரயில்வேதுறை கேட்டுக் கொண்டுள்ளது. இதில் விபத்துக்களை தடுப்பதற்கு பாதுகாப்பை பலப்படுத்த ரூ.30,000 கோடி வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

2024 ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள தேசிய ரயில் திட்டத்திற்கான வரைவு அறிக்கை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8000 கி.மீ., வரை புல்லட் ரயில் திட்டம் 2051 க்குள் விரிவுபடுத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மும்பை - ஆமதாபாத் இடையேயான அதிவிரைவு ரயில் திட்டத்தை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
ரயில் விபத்து எண்ணிக்கையை பூஜ்ஜியமாக மாற்றுவதற்காக 2022-23 ல் துவங்கப்பட உள்ள ரயில்வே திட்டத்திற்கான நிதியை ரூ.20,000 கோடியில் இருந்து, ரூ.30,000 கோடியாக உயர்த்தவும் ரயில்வே நிர்வாகம் கேட்டுள்ளது.
800 கி.மீ., மேலாக லக்னோ, மதுரா, அயோத்தி, பிரயாக்ராஜ், ஆக்ரா, ரேபர்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதே போல் வாரணாசி-பாட்னா, அமிர்தசரஸ்- ஜம்மு, பாட்னா - கவுகாத்தி, ஐதராபாத் - பெங்களூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் புதிய புல்லட் ரயில் திட்டம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பிற்கு பிறகு சமீப காலமாக தான் ரயில்வே துறை சகஜநிலைக்கு திரும்பி வருகிறது. இருந்தும் சில வழித்தடங்களில் குறைவான அளவிலேயே பயணிகள் வருவதால், இவற்றை சரி செய்யும் விதமாக கூடுதலாக நிதியை ரயில்வே துறைக்கு ஒதுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications