அடிதூள்! நாடு முழுக்க புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள்.. நிதியமைச்சரின் சூப்பர் அறிவிப்பு
டெல்லி: 2014க்கு பிறகு மட்டும் நாடு முழுக்க புதிதாக 157 செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை இன்னும் கொஞ்ச நேரத்தில் தாக்கல் செய்யும் நிலையில், பட்ஜெட் மீதான மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
மத்திய பட்ஜெட் இன்று தாக்கலாகிறது. நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. நேற்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் இரு அமர்வுகளாக வரும் ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது.
இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. மருத்துவ துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
2014க்கு பிறகு மட்டும் நாடு முழுக்க புதிதாக 157 செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், வரும் காலத்தில் புதிதாக நாடு முழுக்க 157 செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்












Click it and Unblock the Notifications