உயிர் காக்கும் மருந்துகளின் விலை குறைகிறது! 36 மருந்துகளுக்கு சுங்க வரி ரத்து! பட்ஜெட்டில் அறிவிப்பு
டெல்லி: உயிர் காக்கும் 36 மருந்துகளுக்கு சுங்க வரி முற்றிலும் ரத்து செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2025- 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் 8ஆவது முறையாக இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

இந்த பட்ஜெட்டில் பீகாருக்கு நிறைய திட்டங்களை அள்ளிக் கொடுத்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த அவரது பட்ஜெட் உரையில் ஒரு முக்கிய அறிவிப்பை கொடுத்துள்ளார்.
அதில் உயிர் காக்கும் 36 மருந்துகளுக்கான சுங்க வரி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. இவை கேன்சர், அரிய வகை நோய்களை குணப்படுத்துவதற்கான அத்தியாவசிய மருந்துகளாகும்.
மேலும் 6 உயிர் காக்கும் மருந்துகள் பட்டியலில் 5 சதவீத சலுகை வரி பெறும் பட்டியலில் சேர்க்கப்படும். இதில் புற்றுநோய், அரிதான நோய்கள் உள்ளிட்டவைகளுக்கான மருந்துகளும் அடங்கும்.
இந்த மருந்துகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் மொத்த மருந்துகளுக்கு முழு விலக்கு மற்றும் சலுகை வரி பொருந்தும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அது போல் கோபால்ட் உள்ளிட்ட அரிய வகை தாதுக்குளுக்கு வரி சலுகை கொடுக்கப்படும். இதனால் செல்போன்களுக்கான லித்தியம் பேட்டரியின் விலை குறையும் என அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் அடுத்த ஆண்டு இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரியில் 10 ஆயிரம் கூடுதல் இடங்கள் சேர்க்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 75 ஆயிரம் இடங்கள் சேர்க்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 23 ஐஐடி நிறுவனங்களில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. மேலும் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்ட 5 புதிய ஐஐடிகளில் மாணவர்களுக்கு கூடுதல் உள்கட்டமைப்பு உருவாக்கப்படும் என அறிவித்தார்.
மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது போக அவர் கூறியிருப்பதாவது: முதியோருக்கான வட்டி வருவாய் ரூ 1 லட்சம் வரை வருமான வரி கிடையாது.
லித்தியம் பேட்டரிக்கான இறக்குமதி வரித்து செய்யப்பட்டுள்ளதால் எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை குறைய வாய்ப்புள்ளது. காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீடு வரம்பு 74 சதவீதம் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. வரி செலுத்துபவர்களுக்கு பல்வேறு வசதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நம் அரசு செய்து வருகிறது.
இனி மாதம் ரூ 1 லட்சம் வரை ஊதியம் வாங்குவோர் இனி வரி கட்டத் தேவையில்லை. தனிநபர் வருமான வரிக்கான உச்சவரம்பு ரூ 7 லட்சத்தில் இருந்து ரூ 12 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார். அரசின் வரி விலக்கு அறிவிப்பால் ஆண்டுக்கு நேரடி வரி வருவாய் ரூ 1 லட்சம் கோடியும், மறைமுக வரி வருவாய் ரூ 260060 கோடியும் அரசுக்கு இழப்பு என்றும் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications