2026-27ல் ரூ.16.7 லட்சம் கோடி கடன் வாங்கும் மத்திய அரசு.. நிர்மலா சீதாராமன் சொன்னதை கவனிச்சீங்களா!
டெல்லி: 2026-27 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ஏற்படும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ.16.7 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு எடுத்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மத்திய அரசின் நிதி பற்றாக்குறை ஜிடிபியில் 4.4 சதவீதமாக உள்ளதாக கூறிய நிர்மலா சீதாராமன், 2027ஆம் ஆண்டில் நிதி பற்றாக்குறை 4.3 சதவீதமாக இருக்கும் என்றும் கூறி இருக்கிறார்.
2026-27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். 9வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதனிடையே மத்திய அரசு கடன் அறிவிப்பு குறித்த எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே அதிகமாக இருந்தது.

ஏனென்றால் திமுக ஆட்சியில் அதிகளவில் கடன் வாங்கப்பட்டதாக அதிமுக மற்றும் பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் ஒவ்வொரு ரேஷன் கார்டு மீது ரூ.48 ஆயிரம் வரை கடன் இருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் 2026-27ஆம் ஆண்டுக்கான நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ.16.7 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன் பேசுகையில், 2026-27 நிதியாண்டின் மூலதள செலவாக ரூ.12.2 லட்சம் கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதி பற்றாக்குறை ஜிடிபியில் 4.4 சதவீதமாக உள்ளது. 2027-ல் நிதி பற்றாக்குறை 4.3 சதவீதமாக இருக்கும். இதனால் நடப்பாண்டுக்கான நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ.16.7 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications