இனி இதுதான் எதிர்காலமே.. செமிகண்டக்டர் துறைக்கு ரூ.40,000 கோடியை அள்ளி கொடுத்த நிர்மலா சீதாராமன்
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பல முக்கியமான அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. குறிப்பாக எதிர்கால வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் செமிகண்டக்டர் துறை தொடர்பாகவும் முக்கிய அறிவிப்புகள் வெளியானது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9வது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்தார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 9வது பட்ஜெட்டாகும். இதன் மூலம், அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் 10 பட்ஜெட்கள் சாதனையை அவர் நெருங்குகிறார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது.

செமிகண்டக்டர்
இந்த நவீனக் காலத்தில் செமிகண்டக்டர் மிக முக்கியமான துறையாக உருவெடுத்துள்ளது. அதிநவீனக் கருவிகள் தொடங்கி எலக்டிரிக் கார்கள் வரை அனைத்திற்குமே செமிகண்டக்டர் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. இப்போது இந்தியா மட்டுமின்றி உலகமே செமிகண்டக்டர்களுக்கு சீனாவையே நம்பி இருக்கிறது. அதை மாற்ற மத்திய அரசு பிரதான நடவடிக்கையை எடுக்கப் போகிறது. இது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.
மத்திய அரசு
இந்த பட்ஜெட்டில் செமிகண்டக்டர் துறைக்கு ரூ.40000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதேபோல சரக்கு வர்த்தகத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் கன்டெய்னர் உற்பத்திக்கு ரூ.10000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார். இரண்டுமே இந்தியாவுக்கு முக்கியமான அறிவிப்புகளாகவே பார்க்கப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறுகையில், "இந்தியா செமிகண்டக்டர் மிஷன் 2.0 திட்டத்தை நாங்கள் தொடங்குவோம். தொழில்நுட்பம் மற்றும் திறமையான ஊழியர்களை உருவாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களில் கவனம் செலுத்துவோம்" என்றார்.
ரூ.40,000 கோடி
செமிகண்டக்டர் திட்டத்தின் வேகத்தை முழுமையாகப் பயன்படுத்த, இதற்கான நிதி ஒதுக்கீடு 40,000 கோடி ரூபாயாக அதிகரிக்கவும் மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்திற்குத் தேவையான செமிகண்டக்டர் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
அதேபோல, 2025-ஆம் ஆண்டில் ரேர் எர்த் மெடல்களுக்கு ஒரு திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, கனிம வளம் நிறைந்த மாநிலங்களான ஒடிசா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில், பிரத்தியேகமான ரேர் எர்த் வழித்தடங்களை நிறுவப்பட்டு, மேம்படுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும், மத்திய அரசு வெறும் அறிவிப்புகளோடு நிறுத்தாமல் சீர்திருத்தப் பாதையைத் தேர்ந்தெடுத்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளே விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) இலக்கை அடைய உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐடி துறை அமைச்சர்
ஜனவரி 2022இல் தொடங்கப்பட்ட முதல் 'இந்தியா செமிகண்டக்டர் மிஷன்' திட்டத்தில் கீழ் மத்திய அரசு செமிகண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடப்பு ஆண்டில் செமிகண்டக்டர் சிப் உற்பத்தியை இந்தியா தொடங்கும் என்று மத்திய ஐடி துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்பு கூறியிருந்தார். அதை மேலும் ஊக்குவிக்கும் வகையிலேயே மத்திய அகசின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications