மொத்தம் 350 சீர்திருத்தங்கள்.. பட்ஜெட் உரையில் தொடக்கத்திலே நிர்மலா சீதாராமன் சொன்ன பாயிண்டு
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் மத்திய பட்ஜெட்டை (Union Budget 2026) தாக்கல் செய்தார். அதில் பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். இதற்கிடையே கடந்த 2025 சுதந்திர தினத்திற்குப் பிறகு மட்டும் நாட்டில் 350 சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், அவர் பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்வது இது 9வது முறையாகும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "12 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை, நிதி ஒழுக்கம், நிலையான வளர்ச்சி, பணவீக்கம் ஆகியவற்றுடன் நாட்டின் பொருளாதாரம் சிறப்பான நிலையில் இருக்கிறது.. நிச்சயமற்ற, இடையூறான காலங்களிலும் நாங்கள் எடுத்த சிறப்பான முடிவுகளே இதற்கு காரணம்.
பொருளாதாரத்தை மேம்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2025 சுதந்திர தினப் பிரதமர் மோடியின் உரையைத் தொடர்ந்து 350 சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி முறை எளிமையாக்கப்பட்டுள்ளன.. புதிய தொழிலாளர் சட்டம் வெளியிடப்பட்டுள்ளது. குவாலிட்டி கன்ட்ரோல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல பல்வேறு துறைகளிலும் கட்டுப்பாடுகளை நீக்கவும் மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications