டெல்லியில் 11 பேர் கூண்டோடு தற்கொலை செய்தது ஞாபகம் இருக்கா.. அந்த வீடு இப்ப எப்படி இருக்கு தெரியுமா?
டெல்லி: டெல்லியில் 11 பேர் கூண்டோடு தற்கொலை செய்து கொண்ட வீடு தற்போது ரத்தப் பரிசோதனை ஆய்வகமாக மாறிவிட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி தலைநகர் டெல்லியின் புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும் மூதாட்டி ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்த நிலையிலும் கிடந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவர்கள் அனைவரும் சொர்க்கத்தை அடைய தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர் என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. யாரோ சாமியார் சொன்னதை கேட்டு இவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

லேப் டெக்னீஷியன்
இவர்களது பிரேத பரிசோதனை முடிவுகளும் இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த வீடு தற்போது ரத்தம், சிறுநீர் உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்யும் கூடமாக மாறியது.

பாலை தயிராக்க முயற்சி
இந்த 11 பேரில் ஒருவரின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த குடும்பத்தில் உள்ள ஒருவர் இறந்த தனது தந்தையின் ஆவியுடன் அடிக்கடி பேசுவார் என கூறப்பட்டது. இறக்கும் நோக்கத்தில் இருந்த இவர்கள் பாலை தயிராக்குவதற்காக உரைவிட்டிருந்தது எப்படி என்ற கேள்விகள் எழுந்தன.

அதிர்ச்சி
அது பூஜை அறையிலும் ஏதோ பூஜை செய்ததற்கான அறிகுறிகள் இருந்தன. எனவே இந்த வீட்டில் ஏதோ அமானுஷ்யம் இருக்கும் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கும் நிலையில் அந்த வீடு பரிசோதனை கூடமாக மாறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
|
நோயாளிகள்
இதுகுறித்து பரிசோதனை கூடத்தின் உரிமையாளர் டாக்டர் மோகன் சிங் கூறுகையில் எனக்கு மூடநம்பிக்கைகளில் நம்பிக்கை இல்லை. இதையெல்லாம் நான் நம்பினால் இங்கு வந்தே இருக்க மாட்டேன். இந்த வீட்டில் வந்து ரத்த பரிசோதனை செய்து கொள்ள எனது நோயாளிகளுக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை.

மூடநம்பிக்கைவாதி
முக்கிய சாலைக்கு அருகே இந்த வீடு உள்ளதால் இங்கு பரிசோதனை கூடம் நடத்துவது மிகவும் வசதியாக இருக்கிறது. நான் மூடநம்பிக்கைவாதி அல்ல என்றார். எனினும் அந்த வீட்டில் யாகங்கள், பூஜைகள் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications