சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம்: பதற்றத்தில் டெல்லி ஷாகீன் பாக்- 144 தடை உத்தரவு- போலீஸ் குவிப்பு!
டெல்லி: சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் டெல்லி ஷாகீன் பாக்கில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக்கில் 60 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அமைதிவழியில் நடைபெற்று வரும் இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பல கட்ட முயற்சிகள் நடைபெற்றன.

டெல்லி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. ஆனாலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று அப்பகுதியில் இந்துத்துவா அமைப்புகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தன.
ஆனால் இப்போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலையில் ஷாகீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பெரும் எண்ணிக்கையில் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவு என்ற பெயரில் இந்துத்துவா அமைப்பினர் நடத்திய வெறியாட்டத்தில் 35 பேர் பலியாகினர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இவ்வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் இடம்மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி 4 வார காலத்துக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.
தற்போதுதான் வடகிழக்கு டெல்லியில் இயல்பு நிலைமை திரும்பி வருகிறது. இந்நிலையில் டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வகையில்தான் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications