சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம்: பதற்றத்தில் டெல்லி ஷாகீன் பாக்- 144 தடை உத்தரவு- போலீஸ் குவிப்பு!
டெல்லி: சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் டெல்லி ஷாகீன் பாக்கில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக்கில் 60 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அமைதிவழியில் நடைபெற்று வரும் இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பல கட்ட முயற்சிகள் நடைபெற்றன.

டெல்லி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. ஆனாலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று அப்பகுதியில் இந்துத்துவா அமைப்புகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தன.
ஆனால் இப்போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலையில் ஷாகீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பெரும் எண்ணிக்கையில் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவு என்ற பெயரில் இந்துத்துவா அமைப்பினர் நடத்திய வெறியாட்டத்தில் 35 பேர் பலியாகினர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இவ்வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் இடம்மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி 4 வார காலத்துக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.
தற்போதுதான் வடகிழக்கு டெல்லியில் இயல்பு நிலைமை திரும்பி வருகிறது. இந்நிலையில் டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வகையில்தான் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications