முதல்கட்ட லோக்சபா தேர்தலுக்கு ரெடி.. ஆந்திரா உட்பட 20 மாநிலங்களில் ஓய்ந்தது பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முதல்கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.

நாட்டில், 17வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்கும் மும்முரத்தில் பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல மெகா கூட்டணி என மூன்றாவது அணியும், ஆட்சியை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

Campaign ends for first phase of Lok Sabha polls

இதையடுத்து, கட்சித் தலைவர்கள் நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆந்திரா உள்ளிட்ட 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் ஏப்ரல் 11ல் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, லோக்சபா முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 20 மாநிலங்களில் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்துள்ளது.

ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, சிக்கிம், அந்தமான் நிகோபார், லட்சத்தீவு, தெலுங்கானா, மற்றும், உத்தரகாண்ட் மாநிலங்களிலுள்ள அனைத்து லோக்சபா தொகுதிகளுக்கும், ஏப்ரல் 11ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திரா சட்டசபைக்கும் அன்றுதான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதேபோல அசாம், பீகார், சட்டீ்கர், ஜம்மு காஷ்மமீர், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, திரிபுரா, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலுள்ள சில லோக்சபா தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது.

எனவே அங்கெல்லாம் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+