நவம்பர் 7 முதல் 30 வரை பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா? பசுமை தீர்ப்பாயம் கேள்வி
டெல்லி: நவம்பர் 7 முதல் 30 வரை பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா? பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பி உள்ளது.
தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையாகும். பட்டாசு வெடித்து, புத்தாடை அணிந்து, தீப விளக்கு ஏற்றி, இனிப்புகள் பரிமாறி மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.
தமிழகத்தில் ஒரு நாள் என்றால், வடமாநிலங்களில் தீபாவளி 3 நாள் வரையில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பது வழக்கமாகும். இந்நிலையில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பெரிய அளவில் மாசுபடுவதாக கூறி கடந்த சில ஆண்டுகளாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. டெல்லி போன்ற நகரங்களில் பட்டாசு வெடிக்க தடையும் விதிக்கப்படுகிறது.
தீபாவளி பர்ச்சேஸ்... திருச்சியில் 127 இடங்களில் சிசிடிவி கேமரா... கொள்ளையர்களுக்கு கமிஷனர் வர்னிங்
இந்நிலையில் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டும் பட்டாசு வெடிக்க தடை கோரி பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரி்த்த தேசிய பசுமை தீர்ப்பாயம், நவம்பர் 7 முதல் 30 வரை பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா? என கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல அமைச்சகத்துக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.