Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது.. கனடா நற்பெயரை காத்துக்கொள்ள வேண்டும்.. விளாசிய மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பயங்கரவாதிகளின் புகலிடமாக கனடா மாறி வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. குற்றவாளிகளின் புகலிடமாக கனடா உள்ளது என்ற கெட்ட பெயர் ஏற்படாமல் கனடா அரசு செயல்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்‌ஷி கூறியுள்ளார்.

கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் இந்தியாவிற்கும் இடையே அவ்வளவாக நல்லுறவு இல்லை. ஜி 20 மாநாட்டில் பங்கேற்க ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்த போதும் இந்தியா கொடுத்த ஹோட்டல் ரூமை ஏற்க மறுத்தார். அதேபோல், ஜஸ்டின் ட்ரூடோ விமானம் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு இந்தியாவிலேயே கூடுதல் நாட்கள் தங்க வேண்டியிருந்தது.

Canadian govt take action against those who have terrorism charges MEA Spokesperson Arindam Bagchi

அப்போது, இந்தியா கொடுத்த விமானத்தை ஏற்க மறுத்தார். அது மட்டும் இன்றி ஜி 20 மாநாட்டில் பொதுவான சந்திப்புகளில் ட்ரூடோ ஓரம்கட்டப்பட்டது என்று சில மோதல்கள் ஏற்பட்டன. காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு கனடா கொடுத்த ஆதரவுதான் இந்தியாவில் இந்த நடவடிக்கைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கனடா - இந்தியா இடையேயான மோதல் அடுத்த கட்டத்தை எட்டி உள்ளது.

தற்போது கனடா நாட்டை சேர்ந்தவர்களுக்கான விசா சேவைகளை இந்தியா நிறுத்தி உள்ளது. கனடா நாட்டை சேர்ந்தவர்களுக்கு இந்தியா வருவதற்கான விசா வழங்க இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது. கனடா பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டிற்கு இந்தியா இதன் மூலம் சரமாரி பதிலடி கொடுத்துள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்டப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கலாம்.

இந்தியாவின் ஏஜென்சிகள் இதனை செய்திருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்தியா மீதான இந்த குற்றச்சாட்டோடு நிற்காமல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் ஆதரவு திரட்ட ட்ரூடோ ஆரம்பித்தார். இது போன்ற விவகாரங்களினால் இந்தியா - கனடா உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்‌ஷி, கனடாவை கடுமையாக சாடினார். அரிந்தம் பக்‌ஷி கூறியதாவது:- இந்தியாவுக்கு எதிராக குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கனடா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கனடாவில் இருந்து குற்றச் செயலில் ஈடுபடுவோர் பற்றி கனடா அரசுக்கு ஆதராமளித்தும் நடவடிக்கை இல்லை. ஹர்தீப் சிங் நிஜார் வழக்கில் எந்த தகவல்களையும் கனடா இந்தியாவுக்கு வழங்கவில்லை.

கனடா நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் காரணமாக விசா வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக கனடா மாறி வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. குற்றவாளிகளின் புகலிடமாக கனடா உள்ளது என்ற கெட்ட பெயர் ஏற்படாமல் கனடா அரசு செயல்பட வேண்டும். கனடாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அந்நாட்டின் பொறுப்பு ஆகும். அரசியல் காரணங்களுக்காக இந்தியா மீது கனடா குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. ட்ரூடோவின் குற்றச்சாட்டுக்களை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+