4 நாட்களில் புதிய வழக்கு.. சிபிஐ இடைக்கால இயக்குனருக்கு எதிராக வழக்கு.. சிக்கலில் மத்திய அரசு!
சிபிஐ இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கும் நாகேஸ்வர ராவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி: சிபிஐ இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கும் நாகேஸ்வர ராவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.
சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மா நீக்கப்பட்டார். இவர் கடந்த வாரம் நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் மறுநாளே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான விஜிலென்ஸ் அமைப்பின் தேர்வு கமிட்டி நேற்று கூடி இந்த முடிவை எடுத்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து முன்னாள் இடைக்கால சிபிஐ இயக்குனர் நாகேஸ்வர ராவ் மீண்டும் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன் ஒருமுறை அலோக் வெர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட போதும் கூட, நாகேஷ்வர ராவ்தான் இடைக்கால இயக்குனராக செயல்பட்டார். அதேபோல் அவர் மீண்டும் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சிபிஐ இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கும் நாகேஸ்வர ராவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. காமன் காஸ் என்ற அமைப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
சிபிஐ இயக்குனர் இல்லாத சமயத்தில், புதிய சட்டத்தின்படி இடைக்கால இயக்குனரை நியமிக்க முடியாது, இயக்குநரைத்தான் நியமிக்க வேண்டும். அதனால், இடைக்கால இயக்குனரின் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவர் நியமிக்கப்பட்டு 4 நாட்களே ஆகிறது. அதற்கு இவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications