'தாய் மதம் திரும்புதல்' வார்த்தையை விட்ட ஆர்எஸ்எஸ் தலைவர்! வரிந்து கட்டும் கத்தோலிக்க பிஷப் அமைப்பு
டெல்லி: கர் வப்சி எனப்படும் தாய் மதம் திரும்புதல் இல்லையென்றால் ஆதிவாசிகள் தேசத்திற்கு விரோதிகளாக ஆகியிருப்பார்கள் என்று பிரணாப் முகர்ஜி கூறியதாக ஆர்.எஸ். எஸ் தலைவர் மோகன் பகவத் கூறிய கருத்துக்கு கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் அண்மையில் பேசிய கருத்துக்கள் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராமர் கோயில் குடமுழுக்கு நடந்த நாள்தான் நாட்டிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்த நாள் என்று மோகன் பகவத் கூறினார். இவரது கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி, மோகன் பகவத்தை கடுமையாக விமர்சித்தார். மோகன் பகவத்தின் பேச்சு ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல் எனவும் பொதுவெளியில் இப்படி பேச அவருக்கு எப்படி துணிச்சல் வந்தது எனவும் பிற நாடாக இருந்தால் மோகன் பகவத் கைது செய்யப்பட்டு இருப்பார் எனவும் பேசியிருந்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் மோகன் பகவத் கருத்தை விமர்சித்து இருந்தனர்.

மோகன் பகவத்தின் கருத்து அரசியல் ரீதியாக கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கர் வாப்சி எனப்படும் வேறு மதத்திற்கு சென்றவர்கள் மீண்டும் தாய் மதம் திரும்புதல் நிகழ்வு இல்லையென்றால் ஆதிவாசிகள் தேச விரோதிகளாக ஆகியிருப்பார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியதாக மோகன் பகவத் கூறிய கருத்தும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
மோகன் பகவத் கூறுகையில், பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக இருந்த போது, கர் வாப்சி திட்டத்தை பாராட்டினார். அவர் என்னிடம் கூறுகையில், மதமாற்றம் செய்யும் பணியை இந்து அமைப்புகள் செய்யவில்லை என்றால் ஆதிவாசிகள் தேச விரோதிகளாக ஆகியிருப்பார்கள் என கூறினார்" என்று பேசியிருந்தார்.
மோகன் பகவத்தின் இந்த கருத்தை கடுமையாக கண்டித்துள்ள கத்தோலிக்க கூட்டமைப்பு மோகன் பகவத் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளது. இது தொடர்பாக கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பு கூறியிருப்பதாவது:- மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடனான உரையாடல் என அவர் மறைந்த பிறகு வெளியாகும் இட்டுக்கட்டப்பட்ட கருத்துக்கள் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் இருப்பதோடு, சுயநலத்துடன் வெளியாகும் கருத்துக்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையை எழுப்பும் விதமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருந்த பழங்குடியினரை தங்கள் விரும்பியதை சுதந்திரத்துடன் செய்ய விடாமல் தடுப்பதுதான் உண்மையான தேச விரோத செயல் இல்லையா? என்று கேள்வி எழுப்பியிருந்தது. மேலும் பிரணாப் முகர்ஜி உயிருடன் இருந்த போது இதை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. ஏற்கனவே சுதந்திரம் தொடர்பான மோகன் பகவத்தின் கருத்து அரசியல் ரீதியாக கடும் விமர்சனங்களை எழுப்பி வரும் நிலையில், தற்போது கர் வாப்சி தொடர்பாக மோகன் பகவத் பேசியிருப்பதும் கடும் விவாதப்பொருளாகியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications