ஒரே நாளில் 13 சிபிஐ உயர் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!
சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்ச வழக்கில் சிக்கி இருப்பதை அடுத்து இன்று ஒரே நாளில் 13 சிபிஐ உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

டெல்லி: சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்ச வழக்கில் சிக்கி இருப்பதை அடுத்து இன்று ஒரே நாளில் 13 சிபிஐ உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து இருக்கிறது. இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷியின் வழக்கில் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இன்று காலை திடீர் திருப்பமாக சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இருவரும் இதனால் விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வர் ராவ் அதுவரை சிபிஐ இயக்குனராக செயல்படுவார்.
இதை தொடர்ந்து ஒரே நாளில் தற்போது 13 சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். பணியிட மாற்றம் செய்யப்பட்ட அனைத்து அதிகாரிகளும் சிபிஐ அமைப்பில் உள்ள மிக உயர் அதிகாரிகள் ஆவர்.
இவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவிற்கும், சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவிற்கும் ஆதரவாக செயல்பட்டவர்கள் ஆவர். இதன் காரணமாக இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் இந்த வழக்கில் விசாரணை முடியும் வரை சிபிஐ தலைமையகத்திற்கு வர கூடாது என்று கூறப்பட்டு இருக்கிறது. சிபிஐ அதிகாரிகள் ஏகே பாஸ், அஜய் பாசி, எஸ்எஸ் கும், ஜபால்பூர், மனிஷ் குமார் சின்ஹா, தருண், ஜஸ்பீர் சிங், அனிஷ் பிரசாத், கே ஆர் சவுராஷியா, ராம் கோபால், சதிஷ் தாகர் ஆகிய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்கள் தனியாக விசாரிக்கப்படவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications