2 அறைக்கு சீல்.. பலருக்கு அனுமதி கிடையாது.. சிபிஐ vs சிபிஐ.. பரபரக்கும் உத்தரவுகள்!
சிபிஐ சிறப்பு இயக்குனர் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கி இருப்பதால் சிபிஐ தலைமையகத்தில் புதிய கெடுபிடிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: சிபிஐ சிறப்பு இயக்குனர் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கி இருப்பதால் சிபிஐ தலைமையகத்தில் புதிய கெடுபிடிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து இருக்கிறது. இவர்தான் லஞ்ச புகாரில் சிக்கி உள்ளார்.
இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷியின் வீட்டில் 2014ல் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த வழக்கை சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தலைமையில் சிறப்பு விசாரணை குழு விசாரித்தது. இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை விடுவிக்க சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கட்டாய விடுப்பு
சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இருவரும் இதனால் விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வர் ராவ் அதுவரை சிபிஐ இயக்குனராக செயல்படுவார்.

சீல் வைத்தனர்
இந்த நிலையில் சிபிஐ வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதல்முறையாக சிபிஐ அலுவலகத்தில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட அறைகள் சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறைகள், லஞ்ச வழக்கில் சிக்கி இருக்கும் அஸ்தானா மற்றும் அஸ்தானாவிற்கு அணியில் உள்ளவர்கள் பயன்படுத்தி அறைகள் ஆகும். சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் அறையும் சீல் செய்யப்பட்டுள்ளது.

அதிரடி மாற்றம்
அதுமட்டுமில்லாமல் இன்று காலையில் இருந்து மொத்தம் 13 சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். முக்கியமாக அஸ்தானாவின் அணியில் வேலை பார்த்த அனைத்து அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் பலர் மீது இன்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அனுமதி இல்லை
அதேபோல் சிபிஐ அலுவலகத்தில் இன்றில் இருந்து சில நாட்களுக்கு புதிய நபர்களுக்கு அனுமதி இல்லை. ஆம் சிபிஐயின் வேலை பார்த்தாலும் சில நபர்களை இந்த விசாரணை முடியும் வரை உள்ளே அனுமதிக்க முடியாது என்று சிபிஐ அமைப்பு கூறியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிபிஐ விவகாரம் இந்தியாவில் புதிய புயலை கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications