முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026 ஏப்ரலில் தொடக்கம்.. சேகரிக்கப்படும் விவரங்கள் என்னென்ன?
டெல்லி: முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக மக்கள்தொகை பதிவாளர் மிரித்யுஞ்சய் குமார் நாராயண் கூறியுள்ளார். இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புடன் முதல்கட்ட பணிகள் தொடங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருதடவை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இதற்கு முன்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. இதன்படி, 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிப்போனது.

இதனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் எப்போது நடைபெறும் என்ற கேள்விகள் பல்வேறு தரப்பினராலும் எழுப்பப்பட்டன. இந்த நிலையில்தான், வரும் 2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி முதலில் வீட்டுப்பட்டியல் தயாரிப்பும், அடுத்ததாக மக்கள் தொகை கணக்கெடுப்பும் ஆகும்.
இதில் வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுவசதி குறித்த தகவல் சேகரிப்பு அடங்கிய முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஆண்டு (2026) ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குவதாக இந்திய மக்கள் தொகை பதிவாளர் ஜெனரல் மிரித்யுஞ்சய் குமார் நாராயண் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இந்த பணிகள் தொடங்குவதற்கு முன்பு மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் ஒத்துழைப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள், மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமனம் மற்றும் அவர்களுக்கு பணிப்பகிர்வு ஆகியவை அளிக்கப்படும் என்றும் தனது கடித்தில் மிரித்யுஞ்சய் குமார் நாராயண் தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் கட்டத்தில் வீட்டு பட்டியல் தயாரிப்பு மற்றும் வீட்டு வசதி குறித்த கணக்கெடுப்பில் குடும்பத்தினரின் வீட்டின் நிலைமை, சொத்து மற்றும் வசதிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். அதன்பிறகு நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், குடும்ப அங்கத்தினர் எண்ணிக்கை, சமூக-பொருளாதார, கலாசார நிலை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது.
மக்கள் தொகையின் இரண்டாம் கட்ட பணிகள் வரும் 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி விவரங்களும் சேகரிக்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது.
இந்தியாவில் நடைபெறவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, மொபைல் செயலிகள் மூலம் டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளது. குடிமக்கள் தாங்களாகவே விவரங்களை உள்ளீடு செய்யும் வசதியும் இதில் வழங்கப்படவுள்ளது. குடிமக்களிடம் கேட்கப்பட வேண்டிய சுமார் 36 கேள்விகளை தயார் செய்துள்ளது.
இந்த கணக்கெடுப்பின் மூலம், வீடுகளில் உள்ள தொலைபேசி, இணைய வசதி, வாகனங்கள் (மிதிவண்டி, ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், கார், ஜீப், வேன்) மற்றும் உபகரணங்கள் (ரேடியோ, டிவி, டிரான்சிஸ்டர்) போன்ற உடைமைகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.
மேலும், குடிமக்கள் சாப்பிடும் தானியத்தின் அளவு, குடிநீர் மற்றும் மின்சாரத்திற்கான ஆதாரங்கள், கழிவறை வசதி மற்றும் அதன் அணுகல், கழிவுநீர் வெளியேற்றம், குளியலறை மற்றும் சமையலறை வசதிகள், சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள், எல்பிஜி/பிஎன்ஜி இணைப்பு போன்ற விவரங்களும் கேட்கப்படும்.
வீட்டின் தரை, சுவர்கள் மற்றும் கூரைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், வீட்டின் தற்போதைய நிலை, குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை, அறைகளின் எண்ணிக்கை, திருமணமான தம்பதியர் இருக்கிறார்களா, குடும்பத் தலைவர் பெண் அல்லது பட்டியல் சாதி அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவரா போன்ற கூடுதல் விவரங்கள் கேட்கப்பட உள்ளன.
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
Vijay: வதந்திகளுக்கு பதிலடி! ஷாலினியுடன் சங்கீதா.. அஜித் வீட்டில் விஜய்! லீக்கான வீடியோ -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
விஜய்கிட்ட ஒன்னுமேயில்லை..இன்னும் 10 வருஷம் போகட்டும்! அடம் பிடித்த ராகுலை கார்கே சமாளித்தது எப்படி? -
Vijay Trisha: ஜோடியாக வந்த விஜய் திரிஷா.. சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி.. ஒரே காரில் வந்து பங்கேற்பு -
சங்கீதா விஷயத்தை விட பெரிய சிக்கல்.. அவ்வளவு தூரம் வாக்குறுதி கொடுத்தீர்களே.. புலம்பி கொட்டிய விஜய் -
உலகின் முன்னணி சரக்கு கப்பல் நிறுவனம் வெளியிட்ட அலர்ட்! மொத்த உலகமும் ஸ்தம்பிக்கப்போகுது! -
ராஜ்யசபா எம்.பியாகும் அன்புமணி.. மிக இளம் வயது கேபினட் அமைச்சர் - அட்டெண்டென்ஸ் சர்ச்சை.. யார் இவர்? -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
மண்டமேல இருந்த கொண்டைய மறந்த ஓபிஎஸ்.. கேட்ல இருந்த இரட்டை இலைய எடுத்தீங்களே! வீடு? விளாசிய விந்தியா! -
Election Exclusive: சினேகனுக்கு அடிச்சது யோகம்! எட்டைக் கை காட்டிய கமல்! இரட்டை விரலை தூக்கிய ஸ்டாலின்! மநீம பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications