டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு... ரூ.3,768 கோடி ஒதுக்கீடு... நிதியமைச்சர் அறிவிப்பு
டெல்லி: முதல்முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ள நிர்மலா சீதாராமன், இதற்காக ரூ.3,768 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். கொரோனா பரவல் காரணமாக இந்தப் பட்ஜெட் காகிதமில்லாபட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது

இந்நிலையில், அடுத்து மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முதல்முறையாக டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் இதற்காக 3,768 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்வதாகவும் நிர்மலா சீதாராமன் இன்று தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
முன்னதாக, சில நாட்களுக்கு முன் பேசிய உள் துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்து மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கிடும் பணிகள் மொபைல் செயலி மூலம் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தார். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
வழக்கமாக காகிதங்கள் மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வதற்குப் பதில் டிஜிட்டல் முறையில் சென்சஸ் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த செயலி 16 மொழிகளில் வெளியிடப்படும் என்றும் இதில் தகவல்களைப் பொதுமக்களே பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications