டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு... ரூ.3,768 கோடி ஒதுக்கீடு... நிதியமைச்சர் அறிவிப்பு
டெல்லி: முதல்முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ள நிர்மலா சீதாராமன், இதற்காக ரூ.3,768 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். கொரோனா பரவல் காரணமாக இந்தப் பட்ஜெட் காகிதமில்லாபட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது

இந்நிலையில், அடுத்து மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முதல்முறையாக டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் இதற்காக 3,768 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்வதாகவும் நிர்மலா சீதாராமன் இன்று தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
முன்னதாக, சில நாட்களுக்கு முன் பேசிய உள் துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்து மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கிடும் பணிகள் மொபைல் செயலி மூலம் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தார். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
வழக்கமாக காகிதங்கள் மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வதற்குப் பதில் டிஜிட்டல் முறையில் சென்சஸ் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த செயலி 16 மொழிகளில் வெளியிடப்படும் என்றும் இதில் தகவல்களைப் பொதுமக்களே பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications