சமையல் எண்ணெய் விலை உயர்வு.. வந்தது புது அறிவிப்பு.. வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு
சமையல் எண்ணெய் இருப்பு வைக்க உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
டெல்லி: சமையல் எண்ணெய் விலையை குறைப்பதற்காக, அதை இருப்பு வைப்பதற்கு மத்திய அரசு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. இது பொதுமக்களுக்கு ஓரளவு நிம்மதியை தரும் அறிவிப்பாக அமைந்து வருகிறது.
ஏற்கனவே தினம் தினம் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது.. தொடர்ந்து ஒரு வாரமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்..
இந்நிலையில், தற்போது சமையல் எண்ணெய் வகைகளின் விலையும் கடுமையாக உயர்ந்து வருவது மக்களை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.

இறக்குமதி
இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக, இறக்குமதி வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.. இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீதம், இறக்குமதி செய்யப்படுகிறது... சர்வதேச காரணங்களால் சமையல் எண்ணெய் விலை உயர்ந்தபடியே இருக்கிறது... அதாவது 46 சதவீதம்வரை உயர்ந்து விட்டது...

அமைச்சகம்
அதனால், விலையை கட்டுப்படுத்த மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது... அதன்படி, சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள் ஆகியவற்றை வியாபாரிகள் இருப்பு வைப்பதற்கு உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது. இந்த உச்சவரம்பானது, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும். இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.. அந்த அறிக்கையில் உள்ளதாவது:

இருப்பு
"இருப்பு மற்றும் பயன்பாட்டை அடிப்படையாக வைத்து, எவ்வளவு இருப்பு வைப்பது என்பதை மாநில அரசே முடிவு செய்யலாம்.. இருந்தாலும், சிலவகையான ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு இந்த உச்சவரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது... எந்த வியாபாரியாவது, உச்சவரம்புக்கு மேல் இருப்பு வைத்திருந்தால், அதிகமாக உள்ள சமையல் எண்ணெய் விவரத்தை மத்திய உணவு அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிப்பதுடன், உரிய காலத்துக்குள் உச்சவரம்புக்குள் கொண்டுவர வேண்டும்.

கட்டுப்பாடு
மேலும், கடுகு எண்ணெய் மீதான யூக வணிகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது... மத்திய அரசின் இந்த முடிவுகளால், உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறையும், அதுமட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்று மத்திய உணவு அமைச்சகம் கூறியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications