லேப்டாப், போன்களை கண்காணிக்கலாம்.. 10 அமைப்புகளுக்கு அரசு அனுமதி.. அதிர்ச்சி!
நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும், செல்போன்களையும் கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Recommended Video

டெல்லி: நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும், செல்போன்களையும் கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து நபர்களின் கணினிகளையும், செல்போன்களையும் மொத்தமாக கண்காணிக்க முடிவு செய்து உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை நேற்றுதான் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்தது.
மொத்தம் 10 அமைப்புகள், நிறுவனங்கள் இதற்கான அனுமதியை பெற்று இருக்கிறது. இதன் மூலம் இந்த அமைப்புகள் எல்லாம் நம்முடைய அனுமதி இல்லாமலே நம்முடைய கணினி மற்றும் போன்களை கண்காணிக்க முடியும்.

யாருக்கு எல்லாம் அனுமதி
மத்திய அரசு 10 அமைப்புகளுக்கு இந்த அனுமதியை வழங்கி உள்ளது. சிபிஐ, உளவுத்துறை, அமலாக்க துறை, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் புலனாய்வு இயக்குநரகம், தேசிய புலனாய்வு அமைப்பு, ரா, சிக்னல் புலனாய்வு இயக்குநரகம், டெல்லி கமிஷ்னர் அலுவலகம் ஆகியவை இனி நம்முடைய போன், கணினிகளை நம்முடைய அனுமதி இல்லாமல் கண்காணிக்க முடியும்.

என்ன செய்ய முடியும்
இதன் மூலம் இந்த அமைப்புகள் எல்லா தகவலையும் பெற முடியும். நம்முடைய புகைப்படங்கள் தொடங்கி, நாம் வைத்திருக்கும் கோப்புகள், அந்தரங்க புகைப்படங்கள், போன் பாஸ்வேர்ட் என உங்கள் எலக்ட்ரானிக் பொருட்களில் என்னவெல்லாம் வைத்து இருக்கிறீர்களோ அதை எல்லாம் எளிதாக அவர்களால் எடுக்க முடியும். உங்கள் அனுமதி இன்றியும் இப்படி செய்ய முடியும்.

எதை எல்லாம்
கணினிகள் என்று பொதுவாக மத்திய அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கையின்படி இந்த 10 அமைப்புகளும் கணினிகள், மொபைல்கள், டேப்லெட்கள், ஸ்மார்ட் வாட்ச், பென்டிரைவ், ஸ்மார்ட் டிவிகள் என்று எதில் இருந்தும் தகவல்களை எளிதாக பெற முடியும்.

ஏன் இப்படி
தேசிய பாதுகாப்பு கருதி இந்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. உலக நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்கவும், தீவிரவாத செயல்களை முறியடிக்கவும் , வழக்குகளை, விசாரணையை விரைவாக முடிக்கவும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெரிய அதிர்ச்சி
இந்த அனுமதி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் அனுமதி இல்லாமல் எப்படி மக்களை அரசு கண்காணிக்க முடியும் என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இது மக்களின் அடிப்படை உரிமையில், அந்தரங்கத்தில் தலையிடும் முடிவு என்றும் கூறியுள்ளனர்.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications