சாதிவாரி கணக்கெடுப்புக்கு கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு: இன்று காங்கிரஸ் முக்கிய ஆலோசனை
டெல்லி: நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளும் வகையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் சம உரிமை, பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்களைக் கொண்டு வந்து, சட்டங்கள் இயற்ற சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமாகும். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் உள்ளது.

நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2010-2011 ஆம் ஆண்டில் இறுதியாக இந்த கணக்கெடுப்பு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, அடுத்த கணக்கெடுப்பு 2020-2021 இல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா தொற்று காரணமாக அந்த சமயத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக மத்திய அரசு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ், இந்தியா கூட்டணி கட்சிகள் உள்ளிட்டவை தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. இந்நிலையில், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மத்திய அரசின் முடிவு குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் வகையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications