அரசு ஊழியர்களுக்கு அடிக்க போகுது ஜாக்பாட்! விரைவில் வரப்போகும் குட் நியூஸ்.. டிஏ எவ்வளவு உயரும்?
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை டிஏ எனப்படும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். நடப்பு ஆண்டில் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை டிஏ எனப்படும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. அதாவது, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் என இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான அகவிலைப்படி உயர்வு கடந்த மார்ச் மாதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ஜனவரி 1 ஆம் தேதியிட்டு இந்த அகவில்லைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜூலை மாதம் முடிந்துள்ள நிலையில், விரைவில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த அகவிலைப்படி உயர்வு, விலைவாசி ஏற்றத்தை குறிக்கும் பணவீக்க விகிதத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், தொழிலாளர் நல அமைச்சகம் அளிக்கும் விவரங்களின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு எத்தனை சதவீதம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்து அறிவிக்கும்.
அதன்படி, அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 45 சதவிகிதமாக அளிக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. ஜூலை 1 ஆம் தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். அகவிலைப்படி உயர்வு மூலம் ஏறத்தாழ 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 69.76 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும்.
முன்னதாக, அகில இந்திய ரயில்வே பெடரேஷன் பொதுச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், ஜூன் மாதத்திற்கான ஏஐசிபிஐ தரவுகளின்படி அகவிலைப்படியில் 4% உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. நிதியமைச்சகத்தின் செலவினத் துறை அதன் வருவாய் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான முன்மொழிவை உருவாக்கி, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்" என்றார்.
அகவிலைப்படி உயர்வு ஜுலை 1 ஆம் தேதியிட்டு அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது. அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என சுமார் ஒரு கோடி பயன்பெறுவார்கள். 45 சதவீதம் என்பது அடிப்படை ஊதியத்தில் கணக்கிட்டு கொடுக்கப்படும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications