கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டம்.. கருத்து கேட்பு கூட்டத்திற்கு அழைப்பு
டெல்லி: கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக வரும் அக்டோபர் 1 ஆம் தேதி கருத்துக் கேட்பு கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிள்ளியூர் தாலுகாவிற்கு உள்பட்ட 5 கிராமங்களில் 1,144 ஹெக்டேர் பகுதியில் அணுக்கனிமங்களை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

மத்திய அரசின் ஐ.ஆர்.இ.எல் நிறுவனத்தை இந்த பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அணுக்கனிம சுரங்க திட்டம் அமைப்பது தொடர்பாக வரும் கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 1 ஆம் தேதி இந்த கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இயற்கை வளங்கள் நிறைந்த மாவட்டமமாக கன்னியாகுமரி உள்ளது.
இந்தியாவின் தென் கோடி எல்லையாக அமைந்து இருக்கும் இந்த மாவட்டம் கேராளவை ஒட்டியுள்ளது. மலை, இயற்கை வளங்கள் நிறைந்த பகுதிகளை கொண்ட இந்த பகுதியில் அணுக்கனிமம் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதற்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அபாயமிக்க இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications