நாட்டில் 5 ஆண்டுகளில்...கடன் வாங்கி கட்டாமல்...தப்பி ஓடியவர்கள் 38 பேர்!!
டெல்லி: நாட்டில் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 38 பேர் தப்பி ஓடியுள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் வங்கிகளில் கடன் பெற்றுக் கொண்டு கட்டாமல் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடியவர்களின் விவரங்களை கொடுக்க முடியுமா என்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் கேட்டு இருந்தார்.

இதற்கு நேற்று (திங்கள் கிழமை) மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் எழுத்துபூர்வமாக பதில் அளித்து இருந்தார். அவர் அளித்திருந்த தகவலில், ''விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சி உள்பட 2015 ஜனவரி 1ஆம் தேதி முதல் 2019 டிசம்பர் 31 ஆம் தேதி வரை மொத்தம் 38 பேர் வங்கியில் பணம் பெற்று கட்டாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியுள்ளனர்.
இவர்கள் மீது வழக்கு தொடுத்து விசாரித்து வரும் சிபிஐ இதுகுறித்து அளித்த பதிலில் இவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர் என்று தெரிவித்துள்ளது. சட்டத்தின்படி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொருளாதார குற்றம் செய்து நாட்டை விட்டு தப்பி ஓடியவர்களை திரும்பவும் நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து பல்வேறு நாடுகளுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 11 பேர் மீது பொருளாதார குற்றத்தின் கீழ் தப்பி ஓடியவர்கள் என்று அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடத்த 2019 ஆம் ஆண்டில் ஜனவரியில் இருந்து 2019 டிசம்பர் வரை மட்டும் நாட்டில் இருந்து 11 பொருளாதார குற்றவாளிகள் தப்பி ஓடியுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications