ஊபர், ஓலா நிறுவனங்களுக்கு பறந்த நோட்டீஸ்.. ஆட்டோ, டாக்ஸி கட்டணங்களில் மோசடி? மத்திய அரசு அதிரடி
டெல்லி: ஊபர், ஓலா நிறுவனங்கள் ஒவ்வொரு செல்போனிலும் ஒவ்வொரு கட்டணத்தைக் காட்டுவதாகப் பலரும் குற்றஞ்சாட்டினர். மேலும், இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்களையும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து புகார் அளித்திருந்தனர். இதையடுத்து இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு ஊபர், ஓலா நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த காலத்தில் நாம் ஆட்டோ, கார் என எதுவாக இருந்தாலும் செயலி மூலமாகவே நாம் புக் செய்கிறோம். நேரில் ஓவர் ரேட் கேட்பார்கள் என்பதாலேயே செயலி மூலம் நாம் புக் செய்கிறோம்.

மத்திய அரசு நடவடிக்கை:
ஆனால், செல்போன்களை பொறுத்துக் கூட கட்டணம் மாறுபடுவதாகப் பலரும் புகார் அளித்திருந்தனர். குறிப்பாக ஐபோன்களை வைத்திருப்போருக்கு மட்டும் அதிக கட்டணம் காட்டுவதாகச் சொல்லப்பட்டது. இதற்கிடையே மத்திய அரசு இப்போது இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக ஊபர் மற்றும் ஒலா நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில்,"ஒருவர் பயன்படுத்தும் செல்போன் (iPhones/ Android) மாடல்களை அடிப்படையாக வைத்து வெவ்வேறு கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதாகப் புகார் வந்த நிலையில், இது தொடர்பாகப் பதிலளிக்க நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
புகார் என்ன:
ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல ஒரே நேரத்தில் புக் செய்ய முயலும் போதும் ஆண்டிராய்டு சாதனங்களில் ஒரு கட்டணமும் ஐபோன்களில் ஒரு கட்டணமும் காட்டுவதாகப் புகார் எழுந்தது. பயணிக்கும் தொலைவு, பிக்அப் டிராப் இடம், புக் செய்யும் நேரம் என எல்லாமே ஒரு மாதிரி இருந்தாலும் ஐபோன் என்பதாலேயே அதில் அதிக கட்டணம் வசூலிப்பது சரியான போக்கு இல்லை என்று பலரும் சமூக வலைத்தளங்களில் புகார் அளித்தனர். மேலும், இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்களையும் அவர்கள் பகிர்ந்தனர்.
நோட்டீஸ்
இந்தச் சூழலில் தான் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நுகர்வோரின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், நியாயமான முறையில் கட்டணத்தை நிர்ணயம் செய்வதை உறுதி செய்யவும் இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டிராய்டில் ஒரு கட்டணம், ஐபோன்களில் ஒரு கட்டணம் என வர என்ன காரணம் என்பது குறித்து இந்த நிறுவனங்கள் விளக்கம் தர வேண்டும்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து மத்திய அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் எனத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐபோன்களை வைத்திருக்கிறார்கள் என்பதற்காக மட்டும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது சரியான போக்கு இல்லை என்றும் பலரும் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.
முதல்முறை இல்லை:
அதேநேரம் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக ஐபோன்களில் புதிய அப்டேட் வந்த பிறகு அதன் பேட்டரி திறன் குறைந்ததாகப் பலரும் புகார் அளித்தனர். இது தொடர்பாகவும் நிறுவனத்திடம் நுகர்வோர் பாதுகாப்புத் துறை விளக்கம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications