Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவசர காலத்தில்.. மொபைல் நெட்வொர்க்கை அரசு கைப்பற்றலாம்.. லோக்சபாவில் வரைவு மசோதா அறிமுகம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அவசர காலங்களில் பொது பாதுகாப்பு கருதி எந்த ஒரு மொபைல் நெட்வொர்க்கையும் அரசு கையகப்படுத்த வகை செய்யும் வரைவு மசோதா இன்று லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக லோக்சபாவில் நடந்த பாதுகாப்பு குறைபாடு அவையில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இதுவரை கிட்டதட்ட 92 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனார்.

Centre can take temporary possession of any telecommunication network bill introduced in Lok Sabha

இந்த பரபரப்புக்கு இடையே, லோக்சபாவில் தொலைதொடர்பு மசோதா 2023 இன்று அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்த இந்த வரைவு மசோதாவில், எந்தவொரு தொலைதொடர்பு சேவை அல்லது தொலைதொடர்பு நெட்வொர்க்கை தற்காலிக அடிப்படையில் மத்திய அல்லது மாநில அரசு கையகப்படுத்தி கொள்ள முடியும் என்ற அம்சம் இடம் பெற்றுள்ளது.

அதாவது, பேரிடர் மேலாண்மை உள்பட எமெர்ஜென்சி காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, மத்திய அல்லது மாநில அரசு தேவைப்பட்டால் எந்தவொரு தொலைதொடர்பு சேவையை அல்லது தொலைதொடர்பு நெட்வொர்க்கை கைவசப்படுத்தி கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+