6 நாடுகளுக்கு! 5 மாதங்களுக்கு பிறகு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி
டெல்லி: இலங்கை, வங்கதேசம் உள்பட 6 நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு விளையும் வெங்காயம், நாட்டின் பிற மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆனால் முந்தைய ஆண்டுகள விட கடந்த ஆண்டு வெங்காய உற்பத்தி குறைந்தது. இதனால் இந்தியாவிலேயே வெங்காயத்தின் தேவை அதிகம் இருந்தது. இதனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது.
இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர். இதையேற்ற மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளது.
மேலும் வெங்காய ஏற்றுமதி தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம் நடைபெறும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன், மொரீஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு 99 ஆயிரத்து 150 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது.
சுமார் 5 மாதங்கள் கழித்து 6 ஆண்டுகள் முந்த்ரா துறைமுகம், பிபாவாவ் துறைமுகம், ஜேஎன்பிடி துறைமுகம் வழியாக மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு 2 ஆயிரம் மெட்ரிக் டன் வெள்ளை வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications