இந்தியாவில் இனி கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை தேவை இல்லை- மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு இனி பிளாஸ்மா சிகிச்சை தேவை இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா சிகிச்சை முறைகளில் ஒன்றாக பிளாஸ்மா சிகிச்சை இருந்தது. அதாவது கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் பிளாஸ்மாவை தானமாக பெற்று கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு வந்தது.

இந்த சிகிச்சை முறை தொடர்பாக பல்வேறு முரண்பட்ட கருத்துகள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்தது.
இதனையடுத்து கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தேவை இல்லை என மத்திய அரசுக்கு மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்தது. இதனடிப்படையில் மத்திய அரசும் பிளாஸ்மா சிகிச்சையை கைவிடுவதாக அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் கொரோனா சிகிச்சை தொடர்பான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications