கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்.. சுற்றி வளைத்து சீல் வைக்கும் மத்திய அரசு.. அதிரடி திட்டங்கள்!
டெல்லி: கொரோனா வைரஸ் 3-ஆவது நிலையை அடைவதை தடுக்க அந்த நோய் பாதித்த மாவட்டங்களை சுற்றி வளைத்து சீல் வைக்கும் விதமாக மத்திய அரசு கட்டுப்பாட்டு திட்டங்களை அமல்படுத்த அதிரடி திட்டமிட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4092 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா, டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் 690 பேரும், தமிழகத்தில் 571 பேரும், கேரளாவில் 314 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 227 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 274 மாவட்டங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.

ஆவணங்கள்
மார்ச் 22-ஆம் தேதியிலிருந்து இந்த எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளதால் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 20 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை மத்திய அரசு தயார் செய்துள்ளது. இதில் நோய் பரவலை கடுமையாக கட்டுப்படுத்துவது குறித்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

தனிமை
அதில் கொரோனா பாதித்த பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டுவருவது, இந்த பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவுள்ளது. கொரோனா தொற்று உறுதியானவர்கள், நோய் தொற்று இருக்கும் என சந்தேகிக்கப்படுபவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவர்.

நெகட்டிவ்
கொரோனா வைரஸ் சோதனையில் இரு முறை நெகட்டிவ் என வந்தால் மட்டுமே நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பப்படுவர். கொரோனா அறிகுறிகள் கொஞ்சமாக இருப்போர் ஸ்டேடியங்களில் தனிமைப்படுத்தப்படுவர். மிதமான அறிகுறிகள் உள்ளவர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர். நோய் பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களை மூடுவது போன்ற நடவடிக்கைகளும் 20 பக்க ஆவணங்களில் உள்ளது.

கட்டுப்பாடுகள்
கொரோனா ஊரடங்கு உத்தரவில் அடுத்து வரும் சில நாட்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் யாரும் வீட்டை விட்டு வராமல் கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அமைச்சரவை செயலர் ராஜீவ் கவுபா காணொலி மூலம் தொடர்பு கொண்டு அனைத்து மாநில அரசுகளும் கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்கான திட்டங்களை உடனடியாக அமல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். கொரோனா சோதனைகளுக்கு பிறகு குறைந்தது 4 வாரங்களுக்கு கொரோனாவின் புதிய பாதிப்புகள் இல்லாவிட்டால் மட்டுமே ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் குறைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications