Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வருத்தமான செய்தி.. அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா பணிக்காக மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் அகவிலைப்படி உயர்வு மட்டுமே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றும் பழைய முறையில் 17% என்ற அளவில் அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசுப்பணியில் உள்ள ஊழியர்கள், மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020-21ம் நிதியாண்டில், 1.13 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 முதல் 21 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு வழங்க, கடந்த மார்ச் 13ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது. இதற்காக, மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.14,510 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டிருந்தது.

Centre suspended DA Hikes for Govt Employees, Freeze to Last Till July 2021 With No Arrears

ஆனால் திடீரென பரவிய கொரோனா வைரஸ் தொற்று அகவிலைப்படி உயர்வில் கைவைத்துவிட்டது. ஆம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு கடுமையான முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு ஏரளாமான நிதி தேவைப்படுவதால் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எம்பிக்களின் ஊதியம் குறைப்பு, எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது அந்த வரிசையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கு கடந்த 01.01.2020 முதல் வழங்கப்பட வேண்டிய நான்கு சதவீத அகவிலைப்படி வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜூன் 2020 மற்றும் ஜுலை 20 அகவிலைப்படி உயர்வு தொகை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜுலை வரையிலான அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஆண்டில் அமலில் இருந்து .பழைய முறையில் 17% என்ற அளவிலேயே அகவிலைப்படி தொடரும் என்றும் தொடர்ந்து அகவிலைப்படி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

பொதுவாக மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1முதல் நடைமுறைக்கு வருவது வழக்கம். அதாவது ஏப்ரல் மாதம் புதிய திருத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வுடன் கூடிய சம்பளமும், ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத அரியர்களும் சேர்த்து வழங்கப்பட்டு வரும். இந்நிலையில், ஏப்ரல் மாத சம்பளம் வழங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரியர் தொகை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக உற்பத்தி முடங்கி தொழில்கள் நடைபெறாததால் அரசுக்கு வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசு கொரோனா தடுப்பு பணிக்காக பல்லாயிரம் கோடிகள் செலவு செய்வதால் நிறுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+