எலியும் பூனையுமாக இருந்த ராவும், நாயுடுவும்.. பாஜக அரசை வீழ்த்த கேசிஆருக்கு அழைப்பு!
Recommended Video
டெல்லி: பாஜக அரசை வீழ்த்துவதற்காக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியும் தங்கள் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்காக மே 23-ஆம் தேதியை அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் இந்த நாடே உற்று நோக்கி வருகிறது. இந்த நிலையில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் விடாபிடியாக உள்ளன.
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் அல்லாத அரசு அமைய வேண்டும் என்பதற்காக தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மூன்றாவது அணிக்கு வித்திட்டு வந்தார். இதற்காக அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோரை சந்தித்து பேசினார்.

3-ஆவது அணி
எனினும் பேச்சு பேச்சாகத்தான் இருந்ததே ஒழிய செயலில் ஒன்றும் தெரியவில்லை. சந்திரசேகர ராவ் யாருடனெல்லாம் பேச்சுவார்த்தை நடத்தினாரோ அவர்கள் எல்லாம் 3-ஆவது அணிக்கு வாய்ப்பில்லை என்றே கூறி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி
எனினும் 3ஆவது அணிக்கான முயற்சியை ராவ் கைவிடவில்லை. ஆனால் சற்று இறங்கிவந்துள்ளார். அதாவது முதலில் பாஜக, காங்கிரஸ் அல்லாத அரசு அமைய என கூறியிருந்த அவர் 3-ஆவது அணி அமையும் போது ஆட்சி அமைக்க பெரும்பான்மையில்லாவிட்டால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவும் கோரப்படும் என டிஆர்எஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

டிஆர்எஸ்
ஆயினும் தலைமை பொறுப்பை காங்கிரஸுக்கு கொடுக்க முடியாது என்பதில் தெளிவாக உள்ளது ராவின் டிஆர்எஸ் கட்சி. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட எந்தக் கட்சியையும் தங்களது அணிக்கு வரவேற்பதாக கூறியுள்ளார்.

மனநோயாளி
நாயுடுவின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்த போதிலிருந்து இருவருக்குள்ளும் கருத்து மோதல் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. சந்திரபாபுவை சந்திரசேகர ராவ் மனநோயாளி என்றும் பதிலுக்கு நாயுடு கேசிஆரை கடுமையாகவும் விமர்சனம் செய்து கொண்டனர். இந்த நிலையில் பாஜகவை வீழ்த்த 3-ஆவது அணி ஒன்று வந்து அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிடக் கூடாது என்பதில் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் உறுதியாக உள்ளதையே அவரது அழைப்பு வெளிப்படுத்துகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications