நாசாவின் கருவியை ஏன் அனுப்பினீர்கள்.. உருவான சர்ச்சை.. விக்ரம் லேண்டர் மாயமானதில் தொடரும் மர்மம்!
Recommended Video
டெல்லி: சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் மாயமானது தொடர்பாக நிறைய சர்ச்சைகளும், மர்மங்களும் நிலவி வருகிறது.
சந்திரயான் 2 திட்டம் வெற்றிக்கு மிக மிக அருகில் சென்று சறுக்கி உள்ளது. மிக அருகில் என்றால், 2.1 கிமீ!. ஆம் சந்திரயான் 2வின் விக்ரம் லேண்டர் நிலவிற்கு அருகில் 2.1 கிமீ தூரம் வரை சென்றது.
ஆனால் கடைசியில் ஏற்பட்ட தொலைத்தொடர்பு கோளாறு காரணமாக சந்திரயான் 2 உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விக்ரம் 2 லேண்டர் எங்கே சென்றது என்றும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. சந்திரயான் 2ல் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் இருந்தது.

என்ன இரண்டு
இந்த ரோவர் மற்றும் லேண்டர் இல்லாமல் வேறு 10 பொருட்களையும் சந்திரயான் 2 நிலவிற்கு கொண்டு சென்றது. சந்திரயான் 2 ஐரோப்பாவில் இருந்து மூன்று, அமெரிக்கா மற்றும் பல்கேரியாவில் இருந்து இரண்டு கருவிகளை நிலவிற்கு கொண்டு சென்றது. இவை எல்லாம் நிலவில் தரையிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நாசாவின் பொருள்
ஆனால் அதில் இஸ்ரோ சறுக்கி உள்ளது. அதேபோல் இதில் நாசாவில் இருந்து சந்திரயான் 2 எல்ஆர்ஏ எனப்படும் (Laser Retroreflector Array (LRA)) கருவியை நிலவிற்கு கொண்டு சென்றது. நிலவில் நாசாவின் Laser Retroreflector Array (LRA) கருவி ஏற்கனவே சில இருக்கிறது. இது பூமிக்கும் நிலவிற்கு இடையில் உள்ள தூரத்தை கணக்கிட உதவும்.

சறுக்கல்
நாசாவின் அப்போலோ மூலம் ஏற்கனவே Laser Retroreflector Array (LRA) கருவிகள் சில நிலவில் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது இஸ்ரோ மூலம் மீண்டும் அந்த கருவிகள் அனுப்பப்பட்டது. ஆனால் இதை இஸ்ரோ நிலவில் டெலிவரி செய்ய முடியாமல் சறுக்கி உள்ளது.

என்ன சர்ச்சை
ஆனால் இதை வைத்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அதன்படி இஸ்ரோ சந்திரயான் 2 போன்ற பெரிய திட்டங்களை செய்யும் போது அந்நிய நாட்டு பே லோட்களை கொண்டு செல்ல கூடாது. அப்படி கொண்டு செல்வது அந்த மிஷனுக்கே ஆபத்தாக முடியும்.

மாற்றம்
நாம் ஒரு குறிக்கோளுடன் கருவிகளை உருவாக்கி இருப்போம். மற்றவர்கள் வேறு மாதிரி கருவிகளை உருவாக்கி இருப்பார்கள். அப்படி இருக்கும்பட்சத்தில் நாசா போன்ற நிறுவனத்தின் கருவிகளை சந்திரயான் உடன் அனுப்புவது என்பது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இரண்டுக்கும் அது பிரச்சனை ஆகும்.

என்ன டெலிவரி
இப்போது அந்த நாசாவின் கருவியையும் டெலிவரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, என்று கூறியுள்ளனர். விக்ரம் லேண்டர் எங்கே சென்றது என்ற மர்மம் இப்போதும் நீடித்து வருகிறது. அதனுள் இருந்த நாசாவின் கருவிகளுக்கும், பிரக்யான் ரோவருக்கும் என்ன நடந்தது என்பதும் பெரிய புதிராக உள்ளது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications