மகாராஷ்டிரா ஓவர்.. அடுத்து “மம்தா” கோட்டையில் ‘ஆபரேசன் தாமரை’ - குண்டை போட்ட நடிகர்! மலருமா பாஜக?
டெல்லி: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசை தங்களின் ஃபார்முலாவில் கலைத்த பாஜக அடுத்து மேற்கு வங்கத்துக்கு குறிவைத்து வருகிறதோ என்ற சந்தேகத்தை அடுத்தடுத்த சம்பவங்கள் காட்டுகின்றன.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமனம் செய்ததில் ஊழல் செய்ததாக கூறி தொடர்ப்பட்ட வழக்கில் மேற்கு வங்க தொழிற்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்து இருக்கிறது. 2016 ஆம் ஆண்டு நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில், ரூ.100 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்திருப்பதாக தகவல் வெளியானதால் அமலாக்கத்துறையும் இந்த விசாரணையில் இறங்கியது.
அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், அவரது உதவியாளர் அர்பிதா முகெர்ஜியின் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 20 மொபைல் போன்கள், முக்கிய ஆவணங்கள், பதிவுகள், எலெக்டிரானிக் கருவுகள், வெளிநாட்டு நாணயங்கள், தங்கம் உள்ளிட்ட பல பொருட்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளார்கள். நேற்று இந்த பணத்தை எண்ணிய அமலாக்கத்துறை அதிகாரிகள் 41 கோடி என தெரிவித்துள்ளனர்.

மம்தா பேட்டி
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "பார்த்தா சாட்டர்ஜியை ஒடிசாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏன் அனுமதிக்க வேண்டும்? பாஜக மகாராஷ்டிராவை தொடர்ந்து பாஜக மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று பாஜகவினர் சொல்வது மேற்கு வங்க மக்களை அவமதிக்கும் செயல்.

உள்நோக்கம்
மத்திய அரசு நடத்தும் மருத்துவமனையில் பார்த்தாவை அனுமதித்ததற்கான உள்நோக்கம் என்ன? மத்திய அரசு அப்பாவி என்று மாநில அரசுகள் திருடர்கள் என்றும் நினைக்கிறீர்களா? மாநிலங்களால்தான் நீங்கள் இந்த இடத்தில் உள்ளீர்கள். இந்த முறை மகாராஷ்டிராவால் உங்களை எதிர்த்து சண்டையிட முடியவில்லை.

பாஜகவினருக்கு எச்சரிக்கை
மகாராஷ்டிராவை தொடர்ந்து சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் என்று அவர்கள் சொல்கிறார்கள். இங்கு வருவதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் வங்காள விரிகுடாவை கடக்க வேண்டும். அங்குள்ள முதலைகள் உங்களை கடிக்கும். அடுத்து சந்தர்பான் காடுகளில் ராயல் பெங்கால் புலி உங்களை வேட்டையாடும். வடக்கு பெங்காலில் யானைகள் உங்களை ஏறி மிதிக்கும்." என்றார்.

மிதுன் சக்கரவர்த்தி
இந்த நிலையில் பிரபல நடிகரும், மாநில பாஜக தலைவருமான மிதுன் சக்கரவர்த்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பேரணி செல்லவுள்ளோம். பார்த்தா சாட்டர்ஜி விவகாரத்தில் கவனம் செலுத்த இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 38 எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். 21 பேர் நேரடியாகவே எங்களோடு பேசி வருகிறார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications