பெங்களூர் - சென்னை விரைவு சாலை பணி எப்போது முடியும்? லோக் சபாவில் கட்கரி தந்த சூப்பர் அப்டேட்

பெங்களூர் - சென்னை விரைவுச்சாலை பணி வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என லோக்சபாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசினார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திட்டங்களை செயல்படுத்தவும் முடிக்கவும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பும் மத்திய அரசுக்கு தேவைப்படுகிறது என்று மக்களவையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்தார். அப்போது பெங்களூர் -சென்னை விரைவுச்சாலை பணி எப்போது முடியும் என்றும் அவர் கூறினார்.

எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் அதன் சாலை கட்டமைமைப்பு இன்றியமையாததாக உள்ளது. தொழில்துறை வளர்ச்சிக்கும் நல்ல சாலை கட்டமைப்புகள் அவசியமானது.

அப்போதுதான் சரக்குகளும் கூட ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும். தொழில் வளர்ச்சி மேம்படும் போது வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

 சென்னை - பெங்களூர் சாலை

சென்னை - பெங்களூர் சாலை

இதனால், நாட்டின் பொருளாதாரமும் உயரும். எனவே நாடு முழுவதும் சாலை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை - பெங்களூர், பெங்களூர் - மைசூர் எனப் பல நெடுஞ்சாலை பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது.

சாலையை விரிவு படுத்தும் பணி

சாலையை விரிவு படுத்தும் பணி

குறிப்பாக நாட்டின் முக்கிய சாலைகளில் ஒன்றாக சென்னை - பெங்களூர் இடையேயான வழித்தடம் உள்ளது. 285.3 கி.மீ. தூரத்துக்கான விரைவுச் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலை வழியாக சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல தற்போது சுமார் 5 முதல் 7 மணி நேரம் வரை ஆகிறது. பயண நேரத்தை குறைக்கும் விதமாகவும் பாதுகாப்பான பயணமாக மாற்றும் நோக்கத்திலும் சாலையை விரிவு படுத்தும் பணிகளை இந்திய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு உள்ளது.

டிசம்பர் மாத இறுதிக்குள்

டிசம்பர் மாத இறுதிக்குள்

ரூ.17 ஆயிரம் கோடி செலவில் அமையும் இந்த விரைவுச் சாலை திட்டம் வரும் மார்ச் 2024க்குள் தயாராகிவிடும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தற்போது இந்த சாலை பணிகள் முடிவடையும் காலம் மேலும் தாமதம் ஆகும் என்று தெரியவந்துள்ளது. மக்களவையில் இன்று பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த விரைவுச்சாலை பணிகள் முடிவுக்கு வரும் என்றார்.

நிதின் கட்காரி பதில்

நிதின் கட்காரி பதில்

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது நெடுஞ்சாலைகளில் ஆப்டிகல் பைபர் உள்கட்டமைப்பு பணிகள் அமைக்கும் பணி தொடர்பாக தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- திட்டங்களை செயல்படுத்தவும் முடிக்கவும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பும் மத்திய அரசுக்கு தேவைப்படுகிறது. பெங்களூர் விரைவுச்சாலை பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சுற்றுச்சூழல் அனுமதி

சுற்றுச்சூழல் அனுமதி

தமிழ்நாட்டை பொறுத்தவரை நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி போன்றவை கிடைப்பது சிக்கலான பணியாக உள்ளது. பிறகு எப்படி ஒப்பந்ததாரர்கள் வேலையை முடிப்பார்கள். சென்னை - பெங்களூர் விரைவுச்சாலை பணிகள் இந்த ஆண்டு இறுதி அதாவது டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். சென்னை - பெங்களூர்விற்கு இரண்டு மணி நேரத்தில் செல்ல முடியும். பெங்களூர் டூ மைசூரு இடையேயான பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டது. பெங்களூர்வில் இருந்து மைசூருவிற்கு ஒரு மணி நேரத்தில் செல்ல முடியும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+