சுதர்சன பத்மநாபனுக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்.. 3 பேருக்கு சம்மன் அனுப்பிய சென்னை போலீஸ்
3 ஐஐடி பேராசிரியர்களுக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது
Recommended Video
சென்னை: "ஏன் இன்னும் சுதர்சன பத்மநாபனை கைது செய்யவில்லை.. விசாரிக்கவில்லை" என்று கேரள-தமிழக மாணவர்கள் தீவிர போராட்டத்தை எடுத்து வரும் நிலையில், சுதர்சன பத்மநாபன் உள்ளிட்ட 3 ஐஐடி பேராசிரியர்களுக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.
2 நாளைக்கு முன்பு சென்னை வந்த பாத்திமாவின் அப்பா அப்துல் லத்தீப், தமிழக முதல்வர் பழனிசாமி, டிஜிபி திரிபாதி ஆகியோரை சந்தித்து, முறைப்படி விசாரணை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இப்போது, சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள இல்லத்தில்தான் இவர் தங்கி உள்ளார். இதனிடையே, சென்னை மத்திய குற்றப் பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி, கூடுதல் துணை ஆணையர் மெகலீனா ஆகியோர் அப்துல் லத்தீப்பிடம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பாத்திமா
இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் அப்துல் லத்தீப் சொல்லும்போது, "பாத்திமாவின் கடைசி 28 நாள் டைரி குறிப்புகள், ஹாஸ்டலில் பாத்திமா உடலை முதலில் பார்த்த நபர் எங்களிடம் போனில் பேசிய ஆடியோ பதிவு.. இதை எல்லாம் அதிகாரிகளிடம் தந்துள்ளேன்.. குற்றவாளிகள் எவ்வளவு பெரிய உயர் நிலையில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

பாத்திமா லத்தீப்
ஃபாத்திமாவின் அப்பாவிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பேராசிரியர்களை நேரில் அழைத்து மீண்டும் விசாரணை செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, 3 பேராசிரியர்களுக்கும் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.

சம்மன்
மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சுதர்சன பத்மநாபன் உள்ளிட்ட 3 ஐஐடி பேராசிரியர்களுக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் பாத்திமா மரண விசாரணை பெரும் பரபரப்பை எட்டி உள்ளது.

போராட்டம்
ஏற்கனவே, மாணவி இறந்தும் இத்தனை நாள் ஆகியும், ஏன் குற்றஞ்சாட்டப்பட்ட சுதர்சனம் பத்மநாபனை உடனே கைது செய்யவில்லை, விசாரணைகூட நடத்தவில்லை என்று கேரள மாணவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். அதன் பாதிப்பு தமிழக மாணவர்களிடமும் தென்பட தொடங்கியது.. இந்நிலையில். சுதர்சன பத்மநாபன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி உள்ளது விசாரணையின் துரிதத்தையும், தீவிரத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications