நாட்டின் வளர்ச்சிக்கு காரணமே அவர்கள்தான்.. எதிரிகளை போல நடத்தாதீர்கள்.. போட்டு தாக்கும் சிதம்பரம்
டெல்லி: பொருளாதார மந்தநிலையில் சிக்கி தவித்த நாட்டை 3.9 சதவீத வளர்ச்சிப் பாதைக்கு திருப்பிய விவசாயிகளை மத்திய அரசு எதிரிகளைப் போல நடத்துவதாக முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் மூன்று மாதங்களாக தொடர்ந்து மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு பல்வேறு தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு திருப்பிய விவசாயிகளை எதிரிகளைப் போல நடத்தக் கூடாது என ப. சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்,

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொருளாதார மந்த நிலையில் சிக்கி தவித்த நாட்டை 3.9% வளர்ச்சியடைய வைத்த விவசாய துறையினருக்கு வெகுமதியாகப் போராடும் விவசாயிகளை எதிரிகளைப் போல மத்திய அரசு நடத்துகிறது.
பிரதமர் நரேந்திர மோடி அசாம் முதல் கேரளா வரை பல இடங்களுக்குச் செல்கிறார். ஆனால், வெறும் 20 கிலோமீட்டர் பயணித்து டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளைப் பார்க்க அவருக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும், அவர் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கியதாகக் கூறுவார்.
நாட்டிலுள்ள 6% விவசாயிகளுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும் நிலையே தற்போது உள்ளது. ஆனால் அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும் என்றும் அவர் கூறுவார்" என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் சுமார் மூன்று மாதங்களாகத் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும், பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராகவே உள்ளதாக வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications