நாடாளுமன்றத்தில் தமிழ்.. பாரதியார் பாடலால் நிர்மலா சீதாராமனை வாழ்த்திய ப.சிதம்பரம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராஜ்யசபாவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாரதியார் பாடல் மூலம் வாழ்த்தினார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

லோக்சபா தேர்தலில் தமிழ் இலக்கியவாதிகளான கவிஞர் கனிமொழி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி, ரவிக்குமார், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் வெற்றி பெற்று எம்.பிக்களாகி உள்ளனர். லோக்சபாவில் தமிழக எம்.பிக்கள் அனைவரும் தமிழில் பதவி ஏற்றனர்.

Chidambaram wishes to Nirmala Sitharaman in RS

இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து 'ஜெய் ஶ்ரீராம்' என முழங்கியது. அதற்கு பதிலடியாக வெல்க திராவிடம் உள்ளிட்ட முழக்கங்களை தமிழக எம்பிக்கள் முன்வைத்தனர்.

சில நாட்களுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பிசிராந்தையார் பாண்டிய மன்னன் அறிவுடைநம்பிக்கு அறிவுரை கூறும் யானை புக்க புலம் போல புறநானூற்றுப் பாடலை மேற்கோள்காட்டி பேசினார்.

இதற்கு பதிலடியாக இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்ற திருக்குறளை திமுகவின் ஆ. ராசா சுட்டிக்காட்டி பேசினார். இன்று ராஜ்யசபாவில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது பாரதியாரின் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்; பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்ற வரிகளை சுட்டிக்காட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+